சனி, 16 ஜனவரி, 2016

தேர்தலில் வெற்றி யாருக்கு !

தேர்தலில் வெற்றி யாருக்கு !


தமிழகத்தில் உள்ள ஆளும் கடசி தலைவர்களும் ,எதிர் கட்சி தலைவர்களும் ,மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் ,தங்களுடைய அசையும் சொத்துக்கள் அசையாத சொத்துக்கள் அனைத்தையும்  அரசாங்கத்திற்கு பொது சொத்தாக எழுதி வைத்துவிட வேண்டும்.

அவர்களிடம் எந்த சொத்துக்களும் இல்லாமல் தனித்து இருக்க வேண்டும்.

கட்சி விளம்பரம் போஸ்டர் எதுவும் வைக்கக் கூடாது.

அவர்கள் அறிவும் திறமையும்,மக்களுக்கு நன்மை செய்யும் ஆற்றலும், என்ன என்பதை  மட்டுமே தேர்தலில் மக்களிடம் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும்.

நல்ல ஆட்சி அமைத்து செயல்படும் திறமை மிக்கவர் யார்? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் .

அந்தக் காலம் வந்தால் பொற்காலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

இதைத்தான் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார் .

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க-தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து ...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு