திங்கள், 11 ஜனவரி, 2016

24-1-2016 அன்று வடலூரில் தைப்பூசம் !

24-1-2016 அன்று வடலூரில் தைப்பூசம் !





அனைவருக்கும் வந்தனம் .

வடலூரில் வருகின்ற 24-1-2016,அன்று தைப்பூச ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற உள்ளது .

26-1-2016 ,அன்று,, வடலூர் அருகில் உள்ள ..., வள்ளலார்  சித்திப்பெற்ற இடமான சித்திவளாகம் என்னும் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் காட்டப் படுகின்றது.

பல லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் காணவும், திருஅறை தரிசனம் காணவும்  வருவார்கள் .

நீங்கள் அனைவரும் வாருங்கள் ..ஜோதி தரிசனத்தை ஒரு முறை கண்டாலே உங்களின் துன்பம தொலைந்து இன்பம் பெருகும்  ,

துன்பத்தைப் போக்கி இன்பத்தைக் கொடுக்கும் ஒரே  இடம் வடலூர் ஜோதி தரிசனம் .

அங்கு சாதி,சமயம் மதம் என்ற பேதம் இல்லாமல் எல்லா மக்களும் வந்து ஜோதி தரிசனம் காணலாம் .

அங்கு சாதி,சமய,மதங்களில் உள்ள அபிஷேகம் ,ஆராதனை,ஆச்சார சங்கற்பங்கள்  போன்ற பொய்யுலக ஆச்சாரங்கள் கிடையாது,மேளம் தாளங்கள், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது,

இடைத்தரகர்கள்.கிடையாது உயரந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது .

கடவுளைக் காண பணம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அனைத்துத் தர மக்களும் நேரடியாக காண்பதுதான் வழிபாடு ..

அன்னதானம் சிறப்பு !

மேலும் வடலூரில் அன்னதானம் செய்வதுதான் வள்ளலார் போதித்த முக்கிய கொள்கையாகும்.

அவர் அவர்களால் முடிந்த அளவு ஜீவ காருண்யம் செய்து,அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்று வள்ளலார் தெளிவாக விளக்க்ம் தந்துள்ளார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லோருக்கும் சமமான அருளை வாரி வழங்குவார்.

நீங்கள் இன்பமுடன் வாழ வேண்டுமானால் .வடலூர் வந்து அன்னதானம் செய்யுங்கள்.

23-5-1867,,ஆம் தேதி வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த ''அணையா அடுப்பு'' என்னும் சத்திய தருமச்சாலை மக்களின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு உள்ளது. அங்கும் நீங்கள் அன்னதானம் செய்யலாம்.

மேலும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தும் ஆங்காங்கே அன்னதானம் செய்து கொண்டு இருப்பார்கள் அங்கு வேண்டுமானாலும்,செய்யலாம்.

இருப்பவர்கள் உங்களால் முடிந்த பொருள் உதவி செய்யலாம் இல்லாதவர்கள்  உடல் உதவி செய்யுங்கள்   எதுவும் செய்ய முடியாதவர்கள் வந்து ஜோதி தரிசனம் கண்டு மகிழுங்கள்.

வடலூர் வட திசைக்கு வந்து ஜோதி தரிசனம் தரிசித்தால் நல்ல வரம் பெறலாம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு