புதன், 11 நவம்பர், 2015

சுயநலம் ! பொது நலம் !

சுயநலம் ! பொது நலம் !

தனக்காக வாழ்வதும் ,தங்களை சார்ந்தவர் களுக்காகவும்  வாழ்வது சுயநலம்>.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்காக வாழ்வது பொது நலம்>

சுயநலத்தில் வாழ்வதால் மனம் மகிழ்ச்சி,மனம் நெகிழ்ச்சி  அடைகின்றது .

பொது நலத்தில் வாழ்வதால் ஆன்மா மகிழ்ச்சி,ஆன்ம நெகிழ்ச்சி அடைகின்றது >

சுயநலத்திற்காக வாழ்வதால் ஆன்மா மகிழ்ச்சி அடைவதில்லை>.

பொது நலத்திற்காக வாழ்வதால் ஆன்மா மகிழ்ச்சி அடைகின்றது>

சுய நலத்தால் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம் வந்து அழிந்து போகின்றோம்>

பொது நலத்தால் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து ஆன்மாவில் இருந்து அருள் சுரந்து அழியும் உடம்பை அழியாமல் ஆக்குகின்றது>.

சுய நலத்தில் வாழ்பவரை இறைவன் நாடுவதில்லை>.

பொது நலத்தில் வாழ்பவரை இறைவன் என்றும் பாது காக்கின்றார்>

சுய நலத்தில் வாழ்பவன் இறைவனைத் தேடிச் செல்கின்றான்> .

பொது நலத்தில் வாழ்பவனைத் தேடி  இறைவன் வருகின்றார் >.

உலக துன்பங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பவன் சுயநலவாதி>.

உலகத் துன்பங்களைப் போக்குபவன் பொது நலவாதி>.

சுயநலத்தில் வாழ்பவன் இறைவனைக் காண முடியாது >.

பொது நலத்தில் வாழ்பவன் இறைவனைக் காண்கின்றான்.>

மனிதர்களை மட்டும் நேசிப்பது சுயநலம்>,

எல்லா உயிர்களையும் நேசிப்பது பொது நலம் >.

சிலைகளை வணங்குவது சுயநலம்> .

உயிர்களை வணங்குவது பொது நலம்>

சுய நலவாதி பொருளைத் தேடுகின்றான் >

பொது  நலவாதி அருளைத் தேடுகின்றான். .

சுய நலம் மறக்கருணை >.

பொது நலம் அறக்கருணை >

அறம் எனப்பட்டது இல்வாழ்க்கை ?

கருணை எனப்பட்டது அருள் வாழ்க்கை >

மனிதனுக்கு உபகாரம் செய்வது அறம் >

எல்லா உயிர்களுக்கும் உபகாரம் செய்வது கருணை >

சுயநலம் இறப்பையும் பிறப்பையும் கொடுப்பது.>

பொது நலம் இறப்பையே வெல்லுவது அதாவது மரணத்தையே வெல்லுவது .

சுயநலம் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டே இருப்பது.

பொது நலம் பிறப்பு இறப்பு நீங்கி மனிதன் கடவுளாக மாற்றுவது.

வள்ளலார் சொல்லுவது.;

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை ஊறு எல்லாம் விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி !

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை .

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினால் தந்தனை

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை .

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

எது சரி எது சரியில்லை என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு