திங்கள், 9 நவம்பர், 2015

இயற்கையின் நியதி !

இயற்கையின் நியதி !


இயற்கை என்பது இறைவனால் படைக்கப் பட்டது .

மனிதன் வேண்டுதளுக்கோ வேண்டாமைக்கோ இயற்கை கட்டுப்படாது .

இந்த உலகத்திற்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது இயற்கைக்குத் தெரியும்.

இயற்கைக்கு நாம் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இயற்கை நம்மை ஒன்றும் செய்யாது.

இயற்கைக்கு மாறுபட்டு செயல்பட்டால் துன்பங்களும்
துயரங்களும்,அச்சமும்,பயமும்,மரணமும் ,நம்மை சூழ்ந்து வந்து கொண்டே இருக்கும்.

உலகத்தையும் உயிர்களையும்,பொருளைகளையும் படைத்த இறைவன் என்னும் இயறகைக்கு,..எல்லாம் தெரியும் என்பதை உணர்ந்து .வாழ்ந்தால் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

மனிதன் தேவைக்கு மட்டுமே பொருளை விரும்ப வேண்டும் .அதற்குமேல் பொருளை விரும்பாமல்  அருளை விரும்ப வேண்டும் .

இறைவன் படைத்த  உள்ள பொருள்களை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது.

நாம் தேவைக்கு மீறி செயல்பட்டாலும் அனுபவித்தாலும், நமக்குத் தெரியாமல் மறைமுகமாக துன்பம் வந்து கொண்டே இருக்கும்.

மனிதர்களைப் பக்குவ படுத்தத்தான் அதிகமான வெப்பம் உண்டாக்குவது மழையே இல்லாமல் இருப்பது ,இடைவிடாத மழை பொழிவது ,புயல் காற்று வீசுவது ,கடல் பொங்குவது.,புயலும் மழையும் பொழிவது போன்ற என்னில் அடங்காத சீற்றங்கள் எல்லாம் இயற்கையினால் உண்டாக்கப் படுகின்றது.

மனிதர்கள் உயர்ந்த அறிவு படைத்தவர்கள் எனவே இறைவனின் படைப்பை உணர்ந்து ...இயற்கையின் உண்மையை அறிந்து அதற்குத் தக்கபடி வாழ்ந்தால் என்றும் இயற்கை நம்மைத் தாக்காது .

எண்ணில் அடங்காத பரந்த பரப்பளவு உள்ள இந்த பூமியில் எங்கு எங்கு வாழலாம் எங்கு எங்கு வாழக் கூடாது என்பதை மக்கள் புரிந்து தெரிந்து கொண்டு வேண்டும்

கடல்களின்  ஓரங்களிலோ .நதிகளின் ஓரங்களிலோ .ஏரிகளின் அருகாமையிலோ ,குலம் குட்டை களின் ஓரங்களிலோ..பாலை வானங்களிலோ,.காடுகளின் அருகாமையிலோ, மனிதர்கள் வீடு கட்டி வாழக் கூடாது.

மனிதனின் அறிவை பயன் படுத்தி வாழ்ந்தால் இயற்கையின் தாக்குதலில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மக்களை ஆட்சி செய்யும் ஆட்சி யாளர்களும், அதிகாரிகளும், விஞ்ஞான அறிவியல் வல்லுனர்களும் மனிதன் எங்கு எப்படி  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒழுங்கு முறையை வழி வகுத்து காட்டி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

மனிதனைத் தவிர ,உலகில் உள்ள உயிர் இனங்கள் அனைத்தும் இயற்கைக்கு விரோதம் இல்லாமல் இயற்கைக்கு கட்டுப்பட்டுதான் வாழ்ந்து கொண்டு உள்ளன.

மனிதர்கள் மட்டுமே இயற்கைக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்

இயற்கையை நேசிக்காமல் உண்மையான இறைவனை தெரியாமல் .கண்ட கண்ட பொய்யான தெய்வங்களை வணங்கிக் கொண்டு கடவுள் காப்பாற்றுவார் என்று அறியாமையில் அலைவது .அறிவு இல்லாதவர்களின் செயல்களாகும்.

இயற்கையுடன் போட்டி போட்டால் அழிவுதான் மிஞ்சும் இயற்கைக்கு விரோதம் இல்லாமல் இயற்கையையுடன் ஒன்றி வாழ வேண்டும்.அதுதான் அறிவுள்ள மனித வாழ்க்கையாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். .

2 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 அன்று PM 8:28 க்கு, Blogger Unknown கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 
27 பிப்ரவரி, 2016 அன்று AM 8:07 க்கு, Blogger Unknown கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு