வெள்ளி, 6 நவம்பர், 2015

காதலைத் தேடும் காளைகளே கன்னிகளே !

காதலைத் தேடும் காளைகளே கன்னிகளே !

தெரிந்து செய்யுங்கள் தெளிவாக செய்யுங்கள் !

காதல் என்பது மெல்லிய ரோஜா இதழ்போன்றது !.

முள்ளிலே இருத்தாலும் ரோஜா  தன்னைக் குத்தாமல் பாது காத்துக் கொள்கிறது ..

முள் குத்தாமல் தன்னை பாது காத்துக் கொள்வதே காதல் !.

உண்மை உணர்வதே காதல்,!

உலகை வெல்வதே காதல் !

தன்னை உணர்வதே காதல் !

தாகம் தீர்வதே காதல்,!

அன்பினால் மலர்வது காதல்  !

ஆசையில் பூப்பது காதல் !

கண்ணாடிப் போன்றது காதல் !

கலக்காமல் கலக்குவதே காதல்.!

கற்பை இழக்காமல் இருப்பதே காதல்.!

போதையாக மாறாதது காதல் !

கண்ணைப் போன்றது காதல் !

காதலுக்கும் கண் உண்டு !

கண்ணைப் பாதுகாப்பது போல் காதலைப் பாது காக்க வேண்டும் !.

காதல் ரசம் கற்கண்டு போன்றது.!

காதல் கசக்காமல் பாதுகாக்க கற்றுக் கொள்ளுங்கள் !

காதலுக்கு சாதி,சமயம் மதம் தடையாக இருக்க கூடாது !

வீரத்தின் சின்னம் காதல் !

வெற்றியின் சின்னம் காதல்  !

அன்பின் சின்னம் காதல் !

வாழ்க்கையின் சின்னம் காதல் !

வாழ்ந்து காட்டுவதே காதல் !

சோகத்தில் முடியாத காதல் !

சொர்க்கத்தில் மகிழும் காதல் !

எண்ணத்தில் தோன்றும் காதல் !

இன்பத்தில் முடியும் காதல் !

வாழத் தெரிந்த காதல் !

வாழ்க்கையில் முடியும் காதல் !

கருணைக் கொண்ட காதல் !

காலத்தை வெல்லும் காதல் !

கற்பைக் காக்கும் காதல் !

கல்யாணத்தில் முடியும் காதல் !

அதுவே நிலையான காதல் !

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் கடமை தவறாமல் வாழுங்கள் ..காலமும் கடவுளும் உங்களை காப்பாற்றும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு