வியாழன், 29 அக்டோபர், 2015

முட்டாளுக்கும் அறிவாளிக்கும் என்ன வித்தியாசம் !

முட்டாளுக்கும் அறிவாளிக்கும் என்ன வித்தியாசம் !

முட்டாள் எதையும் படிக்காமல் பேசுவான் .

அறிவாளி படித்ததைப் பேசுவான் .(அதாவது உண்டதை  வாந்தி எடுப்பது போல் )

இரண்டு பேருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

அனுபவமும் அறிவும் இரண்டு பேருக்கும் இல்லை .

அனுபவமும் அறிவும் பெற்றவனே அறிவு உள்ளவன்.

பிறர் எழுதியதைப் படிக்காமலும் பிறர் பேசுவதைக் கேட்காமலும் ஆன்ம அறிவினால்,உண்மை  அனுபவத்தை அறிந்தவனே .முற்றும் தெரிந்த அறிவு பெற்றவன் .

அவன்தான் ஞானி ..அவன்தான் அருளாளன் ...அவன் சொல்லுவது எல்லாம் அறிவு சார்ந்த உண்மை அனுபவமாய் இருக்கும்...

ஆன்ம அறிவைக் கொண்டு, கடவுள் இடம் அருள் அறிவைப் பெற்று உலகத்திற்கு உண்மையைச் சொன்ன ஒரே நபர் வள்ளல்பெருமான் ஒருவரே !

அவர் போதித்த ''சுத்த சன்மார்க்க கொள்கைகள்'' ஒன்றுதான் அறிவும் அனுபவமும் சார்ந்தது ,அவற்றைப் பின் பற்றினால் நாமும் அறிவும் அனுபவமும் பெறலாம்.

வள்ளலார் சொல்லியது ;--

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி

நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் - ஏனுரைப்பேன்

நான் யார் எனக்கு என ஞான உணர்வு ஏது சிவம்

ஊனாடிநில்லா வழி !

என்பார் .மனிதனுக்கு உண்மையை அறியும் அறிவு இருக்கின்றது ஆனால் ஞான அறிவு என்பது இல்லை .

அந்த ஞான அறிவை இறைவன் இடம் இருந்துதான் பெற வேண்டும்.என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஞான அறிவைப் பெற்றதினால் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் இறைவனிடம் பெற்றது என்கின்றார் .

நாமும் வள்ளலாரைப் போல் இறைவனிடம் ஞான அறிவைப் பெறலாம்.ஞான அறிவைப் பெற்றவனே உண்மையை அறிந்தவன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு