வெள்ளி, 30 அக்டோபர், 2015

முதியோர்கள் இருக்கும் இடம் !

முதியோர்கள் இருக்கும் இடம் !

நம்முடைய பண்டைய கால பழக்க வழக்கங்கள் .

தாய் தந்தையர்கள் முதுமை அடைந்து விட்டால் மகன் வீட்டில்தான் இருக்க வேண்டும் மகள் வீட்டில் இருந்தால் கேவலம்,மரியாதை இருக்காது என்பதை எல்லாம் சொல்லி வைத்து விட்டார்கள் அவை முற்றிலும் தவறான செய்தி களாகும் .

தாய் தந்தையர்கள் சொத்து சம்பாதித்து வைத்து இருந்தால் ,அதில் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து,சீர் செலுத்தி விட்டால் போதுமானது .மீதி உள்ள சொத்துக்கள் யாவும் மகனுக்கு சொந்தமாகி விடும் .
இவை நம் நாட்டிலே தொன்று தொட்டு நடந்து வருகின்றது.

சொத்து அனைவருக்கும் சமம் என்று சட்டம் சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை .

தாய் தந்தையர் சொத்தை மகன் அனுபவிக்கிறான் என்பதால் மகனும் மருமகளும் இறுதிவரை நம்மை கண் கலங்காமல் காப்பாற்றுவார்கள் என்பதால் முதியோர்கள்  மகன் வீட்டிலே தங்கி அவர்களுடைய காலத்தை கழித்து வந்தார்கள்.

இப்போது அப்படி இல்லை காலம் மாறிவிட்டது முதியோர்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதியோர்கள் முதியோர் இல்லங்கள் .அநாதி இல்லங்கள் தேடி கண்ணீரும் கவலையுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் அன்பு காட்ட ,ஆசை வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள ஆட்கள் இல்லாமல் அவதிப் படுகின்றார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் /

தாய் தந்தையர்கள்  மகன் வீட்டில் இருக்க நினைத்தால் முதியோர்கள்,அனாதியர் இல்லங்களைத் தேடி அலைய வேண்டியதுதான் .

முதியோர்கள் மகள் வீட்டில் இருப்பதுதான் சாலச்சிறந்தது .

முதியோர்கள் சம்பாதித்த சொத்தை மகன் மகள் என்ற பேதம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்துவிட்டு,தங்கள் பாதுகாப்பிற்கு ஒரு பங்கை எடுத்துக் கொண்டு மகள் வீட்டில் இருந்தால் பிரச்சனைகள் வராது .

மகள் எப்போதும் தாய் தந்தையர் மீது அதிக. பாசம் அன்பு வைத்து காப்பாற்றுவார்.ஏன் என்றால் அவர்களுடைய இரத்த சம்பந்தம்

மருமகன் தடுத்தாலும் அதை மகள் ஏதாவது ஒரு வகையில் சரி செய்து விடுவாள்

மகளுக்கும் தாய் தந்தையர் பாசத்துடன் துணையாக இருக்க வாய்ப்பு உண்டாகும்.

மகன் தாய் தந்தையர மீது அதிக பாசம் வைத்து இருந்தாலும் .மருமகளுக்கு அந்த அளவிற்கு பாசம் இருக்காது .இது இயற்கையின் நியதி .

அதே மருமகளுக்கு அவள் தாய் தந்தையர் மீதுதான் அதிக பாசம் இருக்கும்.இதுதான் உண்மை இதை யாரும் மறுக்க முடியாது .

எனவே முதியோர்கள் மகன் வீட்டில் இருக்க நினைத்தால் முதியோர் இல்லங்களுக்கும் .அநாதி விடுதிகளுக்கும் செல்ல நேரிடும்.

முதியோர்கள் பழைய பழக்க வழக்க குப்பைகளை தூக்கி எரிந்து விட்டு கவுரவம் பார்க்காமல்,வயது முதிர்ந்து விட்டால் ,தங்களிடம் இருப்பதை மகளிடம் கொடுத்து விட்டு  மகள் வீட்டில் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கையாகும் .

இறுதிவரை மகன் வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தால் அன்பு காட்ட ஆள் இல்லாமல் ஆதரவு காட்ட ஆள் இல்லாமல் ,நேரத்திற்கு உணவு கொடுக்க ஆள் இல்லாமல் அவமானம் உண்டாகி அலைச்சல் பட  நேரிடும்.

இனி இளமை மறைந்து முதுமை வரும் முதியோர்களே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

இது யாரையும் குறை கூ றுவது அல்ல இது காலத்தின் கட்டாயம் .

காலங்கள் மாறும்போது நாமும் மாற வேண்டியதுதான் .

முதியோர்கள் மகன் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் மகள் வீட்டில் இருப்பதுதான் சிறந்தது என்பதை உணர்ந்து வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் .

முதியோர் இல்லங்களுக்கும் அநாதி இல்லங்களுக்கும் சென்று அனாதிகளாய் இல்லாமல் மகள்,மருமகன்  பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழுங்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

2 கருத்துகள்:

30 அக்டோபர், 2015 அன்று PM 8:15 க்கு, Blogger vpoompalani கூறியது…

இக்கால சூழ்நிலைக்கு ஏற்ற கருத்து ஏற்புடையது

 
11 டிசம்பர், 2015 அன்று PM 12:39 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு