வியாழன், 12 நவம்பர், 2015

அறிவாளி யார் ? முட்டாள் யார் ?

அறிவாளி யார் ? முட்டாள் யார் ?

அறிவாளிகள் எல்லாம் முட்டாளைத் தேடுகிறார்கள்> .

முட்டாள்கள் எல்லாம் அறிவாளியைத் தேடுகிறார்கள் >.

அறிவாளி முட்டாள்களை ஏமாற்றுகிறான்>

முட்டாள் அறிவாளியிடம் ஏமாறுகிறார்கள் >.

அறிவாளிப் பொருளைக் கொள்ளை அடிக்கிறான் >.

முட்டாள் பொருளை இழக்கிறான் >

அறிவாளித் பணத்தை தேடுகிறான் >.

முட்டாள் கடவுளைத் தேடுகிறான் .>

பணத்தால் அறிவாளி முட்டாள் ஆகிறான் >.

பணத்தால் முட்டாள் அறிவாளி ஆகிறான்.>

ஆட்சியாளன் மக்களை ஏமாற்றுகிறான் >

மக்கள் ஆட்சி யாளனிடம் ஏமாறுகிறார்கள்>

கருணை இல்லா ஆட்சி கருகி அழியும் >

கருணை உள்ள ஆட்சி என்றும் நிலைக்கும் >

பணம் இருக்கும் இடத்தினிலே குணம் இருப்பதில்லை>.

குணம் இருக்கும் இடத்தினிலே பணம் இருப்பதில்லை> .

அறிவாளிக்கும் மரணம் வருகின்றது >.

முட்டாளுக்கும் மரணம் வருகின்றது>.

அறிவாளியும் அருளைத் தேடுவதில்லை,>

முட்டாளும் அருளைத் தேடுவதில்லை.>

பொருள் இருக்கும் இடத்தில் அருள் இருப்பதில்லை.>

அருள் இருக்கும் இடத்தில் அனைத்தும் இருக்கும்.>

பொருளைத் தேடுபவன் பூமிக்குள் செல்கிறான் >.

அருளைத் தேடுபவன் ஆண்டவரிடம் செல்கிறான்>

பொருளைத் தேடும் அறிவு அறிவு அல்ல >

அருளைத் தேடும் அறிவே அறிவு >

புத்தியால் தோன்றும் அறிவு அறிவு அல்ல >

ஆன்மாவில் தோன்றும் அறிவே உண்மை அறிவு >

புத்தி அறிவுப் பொருளைத் தேடும் >

ஆன்ம அறிவு அருளைத் தேடும் >

தவறு செய்பவன் கடவுளைத் தேடுகிறான் > .

தவறு செய்யாதவன் அருளைத் தேடுகிறான்.>

குற்றம் செய்பவன் கோவிலில் கிடக்கிறான்.>

குற்றம் செய்யாதவன் கருணையைத் தேடுகிறான் >.

அன்பு உள்ளவன் உயிர்களை நேசிக்கிறான் >

அன்பு இல்லாதவன் சிலையை நேசிக்கிறான்>.

அன்பு உள்ளவனை ஆண்டவர் நேசிக்கின்றார் >,

அன்பு இல்லாதவனை எமன் நேசிக்கின்றான் >.

அன்பு உள்ளவனுக்கு அருள் வழங்கப் படுகின்றது.>

அன்பு இல்லாதவனுக்கு பொருள் வழங்கப் படுகின்றது >

பொருள் உள்ளவனுக்கு காமம்,வெகுளி ,மயக்கம் வரும்>

அன்பு உள்ளவனுக்கு அருள் வரும் >

பொருள் உள்ளவன் அழிகின்றான் .>

அருள் உள்ளவன் வாழ்கின்றான் >.

மனித நேயம் உள்ளவன் மடிகிறான் >

ஆன்ம நேயம் உள்ளவன் வாழ்கிறான் >

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்;--- .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு