செவ்வாய், 27 அக்டோபர், 2015

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?

நம் நாட்டில் எதற்கு எடுத்தாலும் குருவைத் தேடி அலைந்து கொண்டு உள்ளார்கள்.

மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்று சொல்லி வைத்துள்ளார்கள் .

அதற்கு அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ளாமல் குரு ,குரு என்று அலைந்து கொண்டு உள்ளார்கள்.

மாதா .பிதா,குரு என்ற மூவர்க்கும் தெய்வம்தான் துணையாக இருக்கின்றது.குருவாக இருக்கின்றது என்பது பொருளாகும்.

குருவின் அடையாளம் !

அருளைப் போதிப்பவன் தான் குரு .பொருளை சம்பாதிக்க போதிப்பவன் குருவல்ல .

குரு என்பவருக்கு .நரை,திரை,பிணி ,மூப்பு,பயம் மரணம் என்பது வரக்கூடாது .

சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இருக்கக் கூடாது.

குரு என்பவர் பஞ்ச பூத உணவை உட் கொள்ளக் கூடாது.

குரு என்பவருக்கு சுக்கிலம் (விந்து) உண்டாகக் கூடாது.

குரு என்பவருக்கு தூக்கம் ( உறக்கம்) வரக் கூடாது.

எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எந்நேரமும் தனித்துத்தான் இருக்க வேண்டும்.

பயம் அறவே வரக் கூடாது.

மலம் ஜலம் வரக் கூடாது .

காற்றை சுவாசிக் கூடாது

அமுதக் காற்றைத்தான் சுவாசிக்க வேண்டும்.

பஞ்ச பூதங்களும் அவருடைய உடம்பை விட்டு விலகிச் செல்ல வேண்டும்.

சூரியன் ,சந்திரன்,நட்சத்திரம் போன்ற கிரகங்கள் அவருடைய உடம்பை தாக்கக் கூடாது.

அவரை யாரும் தொட முடியாது .அவரை நேருக்குநேர் யாரும் பார்க்க முடியாது.

மேலே கண்ட அடையாளங்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதை விடுத்து பணம் சம்பாதிப்பவனையும் ,கொள்ளை அடிப்பவனையும் பொய் சொல்லுபவனையும், போலியானவர்களையும், குருவாக ஏற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்.

நமக்கு குரு --எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும்,அவருடைய அருளைப் பெற்ற ,வள்ளல் பெருமான் மட்டுமே குரு.

வள்ளலாருக்கு குரு யார் ?

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி !

பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி .!

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி !

பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து என
அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !

சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி !

என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக விளக்கி உள்ளார் .

வள்ளல்பெருமானுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குருவாக இருந்து எல்லா நன்மைகளையும் செய்து உள்ளார் .

அதேபோல் நாமும் அருட்பெருஞ் ஜோதியையே குருவாக ஏற்றுக் கொண்டால் எல்லா உண்மைகளையும்,நன்மைகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பார் .

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது ;--

ஆதி அந்தமும் இல்லாத தோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செல்லும் வீதி ௧

என்று தெளிவாக நமக்காக விளக்கி உள்ளார் .

நாம் அருட்பெருஞ்ஜோதியை மான சீக குருவாக ஏற்றுக் கொண்டால் தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் தெரிவிப்பார்.

நீதி கொண்டு உரைக்கின்றேன் என்கின்றார் ,நாம் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக சத்தியம் வைத்து சொல்லுகின்றேன் என்கின்றார் நம்முடைய வள்ளல்பெருமான் .

நாம் மேலே செல்லவேண்டுமானால் மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்தான் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்ற சமய மத மார்க்கங்களைப் போல் சன்மார்க்கத்திலும் போலி குருமார்கள் நிறைய தோன்றி உள்ளார்கள் .அவர்கள் பணம் பறிக்க ஆயுத்தமாகி விட்டார்கள் அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்

மனித குருவைத் தேடி அலையாதீர்கள் .மாண்டு போவீர்கள் .

அருள் குருவைத் (அருட்பெருஞ்ஜோதி )தேடுங்கள் கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு