செவ்வாய், 24 நவம்பர், 2015

படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை !

படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை !

படிப்பதால் அறிவு விளங்காது  !

ஒழுக்கத்தால் தான் அறிவு விளங்கும் !

படிப்பு பொருள் சம்பாதிக்க பயன்படும் .

ஒழுக்கம் அருள் சம்பாதிக்க பயன்படும் !

பொருள் மனிதனை அழித்துவிடும் !

அருள் மனிதனை வாழ வைக்கும்.!

பொருள் இருளைக் காட்டும் !

அருள் ஒளியைக் காட்டும் !

இருள் என்பது மறைப்பு !

அருள் என்பது வெளிச்சம் ,ஒளி !

பொருளை வைத்துள்ளவன் பொருளாளன் !

அருளை வைத்துள்ளவன் அருளாளன் !

பொருள் உள்ளவன் அருளாளன் காலில் விழுவான் !

அருளாளன் ஆண்டவரின் காலில் விழுவான் !

பொருளைத் தேடி எமன் எனும் கூறறுவன் வருவான் !

பொருள் உள்ளவனை இருள் சூழ்ந்து கொள்ளும் !

அருள் உள்ளவனை ஒளி சூழ்ந்து கொள்ளும் !

அருளைத்தேடி இறைவன் வருவார் !

இறைவன் வந்தால் இன்பம் வரும் !

எமன் வந்தால் மரணம் வரும் !

பொருளை வைத்து பொருளை மட்டும் வாங்கலாம் !

அருளை வைத்து அனைத்தும் வாங்கலாம் !

பொருள் உள்ளவனை பூமி வாங்கிக் கொள்ளும் !

அருள் உள்ளவனை ஆகாயம் வாங்கிக் கொள்ளும் !

ஆகாயத்தில் இரண்டு வகை உண்டு !

பூத ஆகாயம் ,அருள் ஆகாயம் !

அருள் ஆகாயத்துக்குள் அனைத்தும் அடங்கும் !

பூமிக்குள் பிணம்தான் அடங்கும் !

படிப்பு வேண்டுமா ? ஒழுக்கம் வேண்டுமா ?

மனிதன் வாழ்க்கை மகத்தான வாழ்க்கை !

நீங்களே முடிவு செய்யுங்கள் ......

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு