வியாழன், 19 நவம்பர், 2015

பேசுகின்ற தெய்வம் ,பேசாத தெய்வம் !

பேசுகின்ற தெய்வங்கள் பேசாத தெய்வங்களை வணங்குகின்றது !

பேசுகின்றவன் மனிதன் பேசாதது சிலைகள் .

சிலைகளைப் பார்த்து பாடுகின்றான் .
சிந்தை கலங்கி வாடுகின்றான் .!

படையல் வைத்து படைக்கின்றான் .
அவனே தின்று தீர்க்கின்றான் !.

கல்லும் மண்ணும் பேசுமா
உன் கவலை யாவும் தீருமா !

பசியால் வாட்டும் உயிர்களுக்கு
பசியைப் போக்கும் வழித் தேடு !

உன் துன்பம் எல்லாம் தீர்ந்து விடும் .
துயரம் எல்லாம் அழிந்து விடும் !

உயிருள் இருக்கும் உத்தமனை
உணவு கொடுத்து வணங்கி விடு!

உண்மைத் தெரியாமல் ஓடாதே
ஓடும் இடம் எல்லாம் வெறும் வீடு !

அறிவைக் கொண்டு அறிந்து விடு
யாவும் நலமாய் அமைந்து விடும் !.

எல்லா உயிரும் இறை வீடு
உன்னை அறிந்து அதைத் தேடு !.

உழைக்கும் பொருளை இழக்காதே
பேசாப் பொருளைத் தேடாதே !.

ஒளியைக் கொண்டு வணங்கி விடு
உன் இருளைப் போக்கும் இறை வீடு

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு