வியாழன், 19 நவம்பர், 2015

தெய்வத்தைத் தேடி அலையாதீர்கள் !

தெய்வத்தைத் தேடி அலையாதீர்கள் !

நீங்களே தெய்வம் தான் >.

நீ வேறு அல்ல .தெய்வம் வேறு அல்ல >.

உன்னைப் படைத்த இறைவன் உன் உள் இருக்கின்றான்> .

ஊரைத்தேடி அலையாமல் உன்னைத்தேடினால் உண்மை விளங்கும்.>

தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறியலாம் >.

எல்லா உயிர்களும் இறைவன் வாழும் ஆலயம்> .

இறைவன் இல்லா உயிர் இல்லை .உயிர் இல்லா இறைவன் இல்லை>.

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையாதே > .

துன்பம் தொலைக்கும் துணைவன் இருக்க ,அந்நியனைத் தேடி அலையாதே >.

அறிவைத்தேடு அனைத்தும் காட்டும் >

அறிவுக் குள்ளே அருள் இருக்கின்றது >.

அருளைக் கண்டால் ஆண்டவன் தெரிவான் >

அருள்வேறு ஆண்டவன் வேறு அல்ல> .

ஆன்மாவுக்குள் அனைத்தும் உண்டு >.

அருளே நம் அறிவு அருளே நம் மனம்
அருளே நம் குணம் அருளே சுத்த சிவம் !>

சுத்த சிவமே அருட்பெருஞ்ஜோதி !!!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு