வெள்ளி, 27 நவம்பர், 2015

மனிதன் அழிவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளது !

மனிதன் அழிவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளது !


ஒன்று மது ..ஒன்று மாமிசம்

கள்,கொலை,காமம்,களவு,பொய்.இந்த ஐந்து பஞ்ச மா பாதகங்களையும் விடவேண்டும்

இந்த மா பாதகங்களில் முதன்மையானது மது ,மாமிசம் இந்த இரண்டையும் விட்டவர்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம் .இந்த இரண்டையும் விட்டால் மற்றவை தானாக நின்றுவிடும்.

மது ;--,அறிவையும்,புத்தியையும் மனத்தையும் கெடுக்கும் அதனால் பல தவறுகள் செய்து துன்பம் நிறைந்து சீக்கிரம் உயிரை விட்டுவிடுவான் .

மாமிசம்;-- ..அறிவையும்,புத்தியையும்,மனத்தையும், கெடுப்பதோடு அல்லாமல் உடம்பில் உள்ள அணுக்களை கெடுத்து வியாதி உண்டாக்கி சீக்கிரம் அழிந்து விடுவான் .
மேலும் அறிவு விளக்கத்திற்கும் அருள் விளக்கத்திற்கும்  தடையாக இருப்பது மாமிசம்,

மதுவைவிட மிகவும் கொடுமையானது மாமிசம் உண்பது.  ஏன் என்றால் இறைவன் படைத்த உயிர்களை அழிப்பது ,அதன் புலாலை உண்பது இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.

எவ்வளவுதான் அறிவு உள்ளவனாக இருந்தாலும் அவன் புலால் உண்பவனாக இருந்தால் அவன் மனித இனத்தை சேர்ந்தவன் அல்ல ...அவன் மிருக குணம் உள்ளவன், மிருக இனத்தை சேர்ந்தவன்  என்கின்றார் வள்ளலார்...

பீகாரில் முழு மது விளக்கு அமல் !

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் தேர்தலில் மக்களுக்கு வாக்கு அளித்தபடி அந்த மாநிலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார் .

மது விற்பனை மூலம் நான்கு ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகின்றது .மக்களை அழிக்கும் அந்தப்பணம் தேவை இல்லை .வேறு வழிகளில் அந்த பணத்தை அரசுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற உறுதியோடு மது விலக்கு அமலுக்குக் கொண்டு வந்து விட்டார் .

நம்முடைய தமிழகத்தில் உள்ள முதல்வர் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கின்றார் .எண்ணக் காரணம் என்று தெரியவில்லை.

வருகின்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தான் நல்லது நடக்கும்.அதுவரையில் தமிழக மக்கள் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் .

அரசு மக்களைக் காப்பாற்றுகிறதோ இல்லையோ மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அதுதான் மக்களுக்கு நல்லது.

எந்த ஒரு மனிதனும் மற்றும் குடும்பங்களும் மது,மாமிசம் இல்லாமல் வாழ்ந்தால் அவர்கள் என்றும் வாழ்க்கையில் குறைவு இல்லாமலும்,துன்பம் இல்லாமலும்,வியாதி இல்லாமலும்,அகால மரணம் இல்லாமலும்,நிறைவுடன்  மகிழ்ச்சியுடன் வாழலாம் .

மது, மாமிசம் இல்லாத வீட்டில் என்றும் இறைவன் பாதுகாப்பாக இருந்து தன்னுடைய அருளை வழங்கிக் கொண்டே இருப்பார்.

மது ,மாமிசத்தை விடுங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ...9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு