வெள்ளி, 31 ஜூலை, 2015

சொல்லிவிட்டு செல்வது மரணம் !.சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.!

சொல்லிவிட்டு செல்வது மரணம் !.சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.!

சொல்வேன் .சொல்லுகிறேன் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் ,திருப்பு மயக்கம் இன்றி மரணம் இல்லாமல் .மரணத்தை வென்று வாழ முடியும், வாழ வேண்டும் என்னும் என்னுளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதர சகோதரிகள் என்னும் உண்மையை அறிந்து கொண்ட காரணத்தினால்... .

குறிப்பித்தேன்,குறிப்பிக்கின்றேன் .குறிப்பிப்பேன் .

உண்மை சொல்ல வந்தாலும் உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.

நான் மரணம் அடையாமல் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .ஆதலால் இனி எல்லாவரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த உலக உண்மையை அறிந்து கொள்வதற்கும் .உங்கள் ஆன்மாவையும், உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் பாது காப்பதற்கும் இனி எந்த சாதி,சமயம்,மதங்களும் தடை கிடையாது.

''உங்களை அழித்துக் கொண்டு இருப்பது உலகில் உள்ள சாதிகள் ,சமயங்கள் மதங்களால் உருவாக்கப் பட்ட ஆச்சார .சங்கற்ப விகற்பங்களும்,,வருணம் ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கர்ப்பங்களும் உங்கள் ஆன்மாவின் உண்மையை தெரிவிக்காமல் மறைத்துக் கொண்டு உள்ளன .''

இப்போது நான் சொல்லிய பிரகாரம் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.அவசியம் இதற்குக் காரணமான தயவு அவசியம் வேண்டும்.

அந்த தயவு வருவதற்கு, எல்லா உயிர்களும் ஒன்று என்றும் அதை உண்டாக்கி இயக்கி இயங்கிக் கொண்டு இருப்பது ஆன்மாதான் என்னும் உண்மையை அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையும் கூட இருக்க வேண்டும்.

அப்படி இருந்து கொண்டு இருந்தால் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்கள் இல்லம் தேடி வருவார் . வந்தவுடனே எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்வீர்கள்.

இது சத்தியம் ,இது சத்தியம் ..இது சத்தியம்.இஃது ஆண்டவர் கட்டளை ....வள்ளல்பெருமான் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு