செவ்வாய், 20 ஜனவரி, 2015

ஆன்மாவின் திரைகள் எப்படி நீங்கும். !


ஆன்மாவின் திரைகள் எப்படி நீங்கும். !
நம்முடைய ஆன்மாவை மாயா திரைகள் என்னும் அஞ்ஞான திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளது.ஆதனால் ஆன்மாவை நாம் பார்க்க முடிவதில்லை.
நம்முடனே இருந்து இடைவிடாது நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்ம ஒளியையே பார்க்க முடியவில்லை என்றால் கடவுளை எப்படி காணமுடியும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் ஆன்மாவில் குப்பைகள் போல் திரைகளாகப் பதிவாகிக் கொண்டே இருக்கும் குப்பைகளை எப்படி நீக்குவது என்று இதுவரையில் யாரும் தெளிவாக சொல்லவில்லை.
வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி யுள்ளார் .
ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தால் மட்டுமே அந்த குப்பைகளை நீக்க முடியும் என்கிறார் .ஜீவ காருண்யத்தால் ஆன்மா நெகிழ்ச்சி அடையும் .அந்த ஆன்ம நெகிழ்ச்சியால் உஷ்ணம் உண்டாகும் அந்த உஷ்ணத்தால் ஒவ்வொரு திரைகளையும் எரித்து வெளியே தள்ளிவிடும்.என்கிறார்.
ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள் இருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள வெளிப்படுவது எப்படி என்று அறிய வேண்டில்.
தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன் உள் இருக்கின்ற வெண்ணையும் நெருப்பும் வெளிப்படுவது போல் வெளிப்படும் என்று அறியவேண்டும்.
அதேபோல் ஆன்மாவும் பரமான்வாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள வேண்டும்.
வெண்ணையும் நெருப்பும் வெளிப்படவே அவற்றின் உண்மைத் தன்மை அனுபவமாகிப் பூரணமாவது போல் கடவுள் இன்பம் பூரணமாகும் என்று அறிய வேண்டும்.
ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது வெளிப்படும் என்று அறியவேண்டில்.
பசி,கொலை, பிணி,ஆபத்து,தாகம்,பயம்,இன்மை,இச்சை இவைகளால் ஜீவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை அனுபவிக்கக் கண்டபோதும் .கேட்டபோதும் ,அறிந்தபோதும் அந்த துன்பத்தை போக்குகின்ற போதுதான் ஆன்மாவை மறைத்து கொண்டு ,குவிந்து இருக்கும் குப்பைகளை அகற்ற முடியும்.
இதற்கு உயிர்களின் மேல் அன்பு,தயவு,கருணைக் கொண்டு ஆன்மநேய உரிமைக் கொண்டு துன்பத்தை போக்க வேண்டுமே அப்படி போக்கினால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்க முடியும்.
வேறு எந்த வழியாலும் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்க முடியாது என்பதை வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்து உள்ளார் .
உயர்ந்த அறிவு படைத்த மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை கடைபிடித்தால் ஆன்மாவைக் கண்டு கடவுளைக் காணலாம் ஆன்மாவைக் காண்பதே கடவுளைக் காண்பதாகும்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு