ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கடவுள் இருக்கும் இடம் !


கடவுள் இருக்கும் இடம் !

அறிவு மயமான கடவுள் இருப்பிடம் கோயில் அல்ல .ஒவ்வொருவருடைய உள்ளமே கோயில் .

ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கடவுள் உள்ளார் என்ற உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொண்டால் மக்கள் கோயில்களுக்குப் போகிற வேலைகள் குறையும். வீண் செலவுகள் குறையும்.

கடவுளிடம் செல்லுவதால் கடவுள் எதுவும் கொடுப்பதில்லை உழைப்பால் தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .

உழைக்காமல் உண்பவர்கள் கடவுளின் அருகில் அமர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் .

கொடுக்கும் கடவுளை நம்புங்கள் .வாங்கும் கடவுளை நம்பாதீர்கள் .

எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் உள்ளத்தில் கடவுள் நிலைப் பெற்று இருப்பார் .அதுவே கடவுள் இருக்கும் இடமாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு