செவ்வாய், 21 ஜூன், 2011

மனித பிறவியின் நோக்கம்

மனித பிறவியின் நோக்கம் .

21 ஜூன் 2011, 13:49 க்குஇல் Kathir Kathirveluஆல் எழுதப்பட்டது
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம்,அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி,ஆன்ம உருக்கம் .கடவுள் வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதாகஅறிதலாகும்.

ஜீவகாருணயம் உண்டானால் அன்பு உண்டாகும்,அன்பு உண்டானால் அருள் உண்டாகும்,அருள் உண்டானால் உண்மையான கடவுள் யார் என்பதையும் எல்லா உண்மைகளையும் அறியலாம் .உண்மைளை அறிந்தால் பேரின்ப வாழ்வு வாழலாம்.பேரின்ப வாழ்வு வாழ்வோரை கடவுள் ஏற்றுக் கொள்வார்,கடவுள் ஏற்றுக் கொண்டால் பிறப்பு இறப்பு என்பது இல்லை, இதுவே மனித வாழ்க்கையின் நோக்கமாகும்.மனித பிறப்பு கிடைத்தின் நோக்கமே இறை நிலையை அடைவதுதான் .அதுவே பேரின்ப வாழ்க்கையாகும்.என்றும் அழியாத வாழ்க்கை வாழ்வதுதான் மனித பிறப்பு எடுத்ததின் குறிக்கோளாகும் ,இதை மனிதர்களாகிய நாம் அனைவரும் அறிந்து புரிந்து தெரிந்து,வாழ்ந்து மரணம் இல்லா பெரு வாழ்வு வாழ்வோம். ;--வள்ளலார்
அன்புடன் --கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு