ஞாயிறு, 29 மே, 2011

நண்பருக்கு கடிதம்



Kathir Kathirvelu29 மே 09:50
கோட் செய்யப்பட்ட வாக்கியத்தை மறை
ஆன்மநேய அன்புடையீர் உங்களுக்கு மிகுந்த வணக்கம் ,
உங்கள் சிந்தனை சரிதான் இருந்தாலும் வள்ளலார் நிலை
வேறு மற்றவர்கள் நிலை வேறு,வள்ளலார் வழியில் நின்று
மரணத்தை வென்றால் அவர்களை என்னுடைய சிரசின் மேல்
வைத்து கொண்டாடுகிறேன்.அவர்களை அருட்பெரும்ஜோதி யாகவே
மதிக்கிறேன்.அப்படி அனைவரும் வரவேண்டும் என்பதுதான் .வள்ளலாரின்
விருப்பம்,ஏன் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் விருப்பமாகும்.
அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.வள்ளலாருக்கு முன்னாடி
வாழ்ந்தவர்கள் உண்மையை உணர்ந்தார்கள்.உண்மையிடம்
செல்ல முடியவில்லை என்பது உண்மையாகும் .அதனால் தான்
முழுமையான உண்மைகளைஅனைவரும் தெரிந்து கொள்ள,
வேண்டுமென்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை
இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது உண்மையாகும் .

வள்ளலார் உரைத்த அனைத்தும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்
உரைத்ததாகும்.வள்ளலார் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்
நாயகன் தன வார்த்தை என்றார்கள்.நான் யார் ?எனக்கு என ஞான
உணர்வு ஏது ?ஏது அறியாது இருளில் இருந்த என்னை எல்லோரும்
அறிய ஏற்றி வைத்தாய் என்றார் .இவைபோல் பல்லாயிரம் பாடல்கள்
இருக்கின்றன.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் வள்ளலார்.வள்ளலார்தான்
வள்ளலார்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பது உண்மையாகும் .
கடவுள் எழுதியது திருஅருட்பாவாகும்.அதனால்தான் திரு அருட்பாவை
விரும்புகிறேன்.வள்ளலாரை விரும்பவில்லை அருட்பெரும்ஜோதியைத்தான்
ஏன் அன்றால் வள்ளலார் வேறு அருட்பெரும் ஜோதி வேறாக அடியேன்
பார்க்கவில்லை.அனைவரும் உயர்ந்த நிலையான சுத்த பிரணவ ஞான தேகம்
பெறவேண்டும் என்பதுதான் அடியேனுடைய விருப்பமாகும் .
மேலும் மற்றவர்களுக்கும் வள்ளலாருக்கும் என்ன வேறுபாடுகள் என்பதை
தெளிவாக்குகிறேன்.அடுத்த கடிதத்தில் தெளிவு படுத்துகிறேன்

மேலும் உங்களுக்கு என்னைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் ,
நீங்கள் என்னுடன் உரிமையுடன் சந்திக்கலாம்.இல்லையேல் உங்களுக்கு
விருப்பம் இருந்தால் அடியேன் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.நேரில்
பகிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களை பகிந்து கொள்ளலாம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்
உண்மையில் வேறுபாடுகள் இருக்க கூடாது.இதுவே என்னுடைய
விருப்பமாகும் .
அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு

1 கருத்துகள்:

30 மே, 2011 அன்று AM 9:30 க்கு, Blogger சி.பி.செந்தில்குமார் கூறியது…

நீங்களும் ஈரோட்டுக்காரர் தானா? மகிழ்ச்சி..

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு