வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

@ 1 place there is a kuripu - oru naalaiku 1 mani neram matumay thoonginal -aayulai 1000 varudam nidithukolalamam..: )
Krish Selvakumaran29 ஏப்ரல் 13:00
@ 1 place there is a kuripu - oru naalaiku 1 mani neram matumay thoonginal -aayulai 1000 varudam nidithukolalamam..: )
Comment History
Ramani Sundararajan
Ramani Sundararajan28 ஏப்ரல் 21:39
இறை நிலையில் லயிக்க லயிக்க, உட்கொள்ளும் உணவின் அளவு குறையும்... காற்றும் கூட சுவாசித்தல் மூலம் உணவாகும்... 3- 4மணி நேரம் உறக்கம் போதுமானதாக இருக்கும்.. அயரா விழிப்பு நிலையிலே இருக்கும் நிலையே தொடரும். வள்ளலார் எதையும் துறக்கவில்லை... யாரை விட்டும் விலக வில்லை... அவரைச்சுற்றி இருந்தவர்கள்/ நினைப்பவர்கள், அவரைப்போன்று இருக்க முயற்சிக்கவில்லை. அதுவே அவர் தனியாகவே இருந்ததாக பார்ப்பவர்களால் உணரப்பட்டது. எழுதப்பட்டது.

இன்று வள்ளலாரை நினைத்தால் அவர் அருள் நமக்குக்கிட்டாதா என்ன? ஆழ்ந்து வேண்டினால் நம் முன் வரமாட்டாரா?

தவத்தினால் உடலில் ஏற்படும் ரசாயான மாற்றங்களால், உணவு, எண்ணம் முதலான தேவைகள் குறைந்து விடும் என்பது ஒரு விசயம்.
Karthikeyan Sammandam
Karthikeyan Sammandam28 ஏப்ரல் 09:35
உண்மைதான் அய்யா ஆனால் வள்ளலார் எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி இறைலயத்தோடு இருந்தார், தூக்கம் தவிர்த்தார், உணவைக் குறைத்தார், தனித்திருந்தார் இறைவன் குருவாக வந்தார். ஆனால் நாம் அப்படியா உள்ளோம்? எனவே உண்மை குருமார்களிடம்தான் முதல் திரை விலக்கும் சாவி உள்ளதாக வள்ளலாரே கூறி உள்ளாரே!
Original Post
Kathir Kathirvelu
Kathir Kathirvelu28 ஏப்ரல் 05:50
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,அறிவை அறிவால் அறிகின்ற பொழுது அனுபவம் ஆகும்.நமக்கும் இறைவன் அறிவை கொடுத்து இருக்கிறார்.அறிவின் மூலமாக தேடி தெளிவு பெற வேண்டும்.நமக்கு இறைவன் குருவாக இருக்கின்ற போது மனிதனை குருவாக ஏற்கக்கூடாது.அவர்களுக்கு கொடுத்த ஆற்றலை நமக்கும் இறைவன் கொடுப்பார்.உண்மையை தேட வேண்டூம்.தேடினால் அனைத்தும் கிடைக்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு