செவ்வாய், 12 மே, 2020

அருள் எவ்வாறு பெற முடியும்.!

அருள் எவ்வாறு பெற முடியும் !

அருள் என்னும் பொக்கிஷத்தை பெறுவது கடவுளின் கருணையால் கடவுளின் தொடர்பால் மட்டுமே பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே .

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அருள் வழங்கும் தகுதி உடைய கடவுள் ஒருவரே ! அவரைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.

அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பெயர் சூட்டினார்.அவர்தான் தனிப்பெருங்கருணை உள்ளவர் என்பதையும் அறிந்து கொண்டார்.

அறிவுள்ள உயர்ந்த பிறப்பான மனிதப்பிறப்பு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.

இந்த உண்மை அறியாமல் மனித இனம் பிறந்து பிறந்து.இறந்து இறந்து கொண்டே தொடர்கதையாக உள்ளன.

அருளை வழங்கும் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
ஒருவரே ! அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர்.

அந்தக் கடவுளை நாம் தொடர்பு கொள்வதைவிட .அக்கடவுள் நம்மை தொடர்பு கொள்ளும் அளவிற்கு நம்வாழ்க்கை.அன்பு. தயவு.கருணை .ஒழுக்கம். தூய்மை சத்தியம் அறிவுடைமை .அருள் பெறும தகுதி  உடையதாக இருக்க வேண்டும்.

ஆன்மாக்கள் எல்லாம் பெண் தன்மை உடையதாகும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆண்தன்மை உடையவராகும்.எனவே ஆன்மாக்களை ஆண்டவர் விரும்பினால் மட்டுமே அருள் பெறமுடியும்.

உலக பற்று உள்ளவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கண்டு கொள்வதே இல்லை.அவரவர் நல்வினை தீவினைகளுக்கு தகுந்தாற போல் வாழ்க்கை அமைந்து கொண்டே இருக்கும்.

உலகப்பற்று என்பது மண்ணாசை.பெண்ணாசை.பொன்னாசை என்ற மூன்றுக்குள் அடங்கி விடுகின்றது.

மூன்று பற்றும் வைத்துக்கொண்டு ஜீவகாருண்யம் செய்தாலும்.கடவுளை வணங்கினாலும் கடவுள் அருள் கிடைக்க வாய்ப்பில்லை.

கடவுள் அருள் பூரணமாக பெற்றால் மட்டுமே ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வேதியல் மாற்றம் உண்டாகும்.

ஒளி உடம்பு பெற்றால் மட்டுமே மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் மரணத்தை வெல்ல முடியும். மரணத்தை வெல்லும் வழியைக் கற்றுக்கொள்வதே சாகாக்கல்வி என்பதாகும்.

வள்ளலார் பாடல் !


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

ஜனனவேதனை.நரகவேதனை. மரணவேதனை. பசிவேதனை என்ற நான்கு வேதனைகள்தான் சார் உலக வேதனைகளாகும்.

இந்த நான்கு வேதனைகளையும் தவிர்த்தவர் உள்ளத்தில் தான் இறைவன் வந்து அமர்ந்து அருள் வழங்குவார் என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.

அந்த வேதனைகளுடன் தொடர்பு உடையவர்கள் எக்காலத்திலும் இறைவனை தொடர்பு கொள்ளவே முடியாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.

அந்த வேதனைகளே வினைகளாக மாற்றம் அடைகின்றன.

உலகில் உள்ள பற்றுகள் அனைத்தையும் பற்றுஅற விட்டதினால் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னிடம் தொடர்பு கொண்டார் அருளை வாரி வாரி வழங்கினார்.ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றினார் மரணத்தை வென்றேன்.எல்லாம் செய் வல்லபமும் பெற்றேன் என்கிறார் வள்ளலார்.

எல்லாம் செய்யும் வல்லபம் உடைய தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஓர் உறவாக்க் கருதி உள்ளம் எலாம் கனிந்து உறுகி  இடைவிடாது நேசிக்க வேண்டும். 

இறைவனை தொடர்பு கொள்ள தடையாக உள்ள உலக பற்றுகள் அனைத்தையும் ஆன்மாவில் இருந்து அகற்ற வேண்டும்.அகற்றுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.

எல்லாம் செயல் கூடும் என் அணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ! 

என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

அருளைப்பெற ஒரே வழி சார் உலக வாதனையை ஒழிக்கவேண்டும் அகற்ற வேண்டும்.விலக்க வேண்டும்.

காலம் பொன் போன்றது .எனவே காலத்தை வீண் விரையம் செய்யாதீர்கள் என்கிறார் வள்ளலார்.

இதுவரையில் இருந்ததுபோல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள் என்று அழுத்தமாக சொல்லுகின்றார்.

மரணத்தை வெல்லுவதும் வெல்லாததும் அவரவர் செய்யும் செயல்பாட்டில்தான் அருள் பெறும் பயன்களும் விடைகளும் உள்ளன.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு