புதன், 17 ஜூலை, 2019

கடவுளைக் கண்டவர் உண்டோ !

கடவுளைக் கண்டவர் உண்டோ ?

கடவுளின் அருளைப் பெற்றவர்கள் உலகில் நிறைய பேர் உண்டு.அவர்களுக்கு அருளாளர்கள் என்று பெயர்.

அருளைப் பெற முடிந்த்தேத் தவிர கடவுளைக் காண முடியவில்லை.

கடவுளைக் காணாததால்.கண்டவர் விண்டதில்லை.விண்டவர் கண்டதில்லை என்ற ஒரு மாபெரும் பொய்யை சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.

நமக்கு அருளாளர்கள் காட்டிய தெய்வங்கள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனைக் கலைகளையே  தெய்வங்களாக காட்டி உள்ளார்கள்.

எல்லாத் தெய்வங்களுமே எதோ ஒன்றை வேண்டிக் கொண்டும்.எதிர்பார்த்துக் கொண்டும் தான் உள்ளன எல்லா தெய்வங்களும் தவம் செய்வதுபோல் படைத்து இருப்பார்கள். .அந்த தெய்வங்கள் செல்வதற்கு தகுந்தாற்போல்.பறவை.மிருகங்களை வாகனமாக காட்டி இருப்பார்கள்..

தெய்வங்களை அழைத்து செல்ல வாகனம் வைத்திருப்பதால் .தெய்வங்களை விட பறவை.மிருகம் உயர்ந்த்து தானே என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்..

மேலும் தெய்வங்களுக்கு கை.கால்.முதலியன இருக்குமா என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்..

கடவுள் செல்வதற்கு வாகனம் வேண்டுமா என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது....

ஆன்மா ஆன்மா என்றும் உள் ஒளி என்றும் .அகம் பிரம்மம்.எல்லாம் சிவமயம் என்றும் எல்லாம் விஷ்ணுமயம்.எல்லாம் அரேராமா.அரே கிருஷ்ணா என்றும்.ஏசு.அல்லா.புத்தம் சரணம்.  என்றும்.பலவிதமான பெயர்களைச்  சொல்லிக் கொண்டும் உள்ளோம். அவரவர் வேண்டுதலுக்குத் தக்கவாறு ஏதோ ஒரு சக்தி அருளை வழங்கிக் வழங்கிக் கொண்டுள்ளது.

எந்த ஆன்மாவும் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைக் காணவில்லை..

ஆன்மாக்கள் எல்லாம்.ஆன்ம நேயமுள்ள கடவுளின் குழந்தைகள் என்கிறோம்..

அந்தக் குழந்தைகள் உங்கள் கருத்துப்படி தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நெருங்க முடியவில்லை.காணமுடியவில்லை..

அருளைப்பெற முடிந்த்தேத் தவிர கடவுளைக் காண முடியவில்லை.

அருளினால் பல அற்புதங்களைச் செய்யலாம் ஆனாலும் கடவுளைக் காணபதற்கு பலப்பல உயர்ந்த தகுதிகள் வேண்டும்.அவை கடவுள் ஏற்றுக் கொள்ளும் தகுதிகளாக இருக்க வேண்டும்.

*இந்த உலகில் உண்மைக் கடவுளைக் காணும் ..எல்லாத் தகுதிகளும் பெற்றவர் வள்ளலார் ஒருவரே !*

*இப்படிச் சொன்னால் சில சமய மதவாதிகளுக்கு கோபம் பொத்திக் கொண்டு வரும்.*.

*வள்ளலார் சொல்லும் பாடலை ஊன்றி படித்தால் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்...!*

அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்
அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்

தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகா மணியை

மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த
வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்

*கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே*.

என்னும் பாடலிலே எல்லாவற்றுக்கும் அருளை வழங்கும் அருட்குருவை ..கருணை நடம் புரிகின்ற கனக சபாபதியை..

கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் என்கிறார்...!

மேலும்...பல பாடல்கள் உள்ளன அதில் ஒரு பாடல்!

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே

தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடி சேர்த்தருள்க எனச் செப்பி வருந் திடவும்

நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந் தெனக்கே
நல்ல திரு அருளமுதம் நல்கியதன் றியும் என்

ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும் நுழைந் தனையே.!

என்கிறார் வள்ளலார்.

பிரம்மா. விஷ்ணு. சங்கரன்.சிவன்.மகேஸ்வரன் போன்ற கர்த்தாக்களும்.மற்றம் சித்தர் யோகி ஞானிகளும். மற்றும் ஏசு.அல்லா.புத்தர் போன்ற மதத் தலைவர்களும் பதத் தலைவர்களும்...

ஆண்டவர் வந்து அமருவதற்கும் அவர் வருவார் என எதிர்பார்த்தும்  ஆடம்பரமான.மாளிகையை அமைப்பை உருவாக்கி அங்கே தேன் அமரும் மலரைப் போல்  மலரணை அமைத்து.  அளவிட முடியாத கடும் தவம் செய்து (இருந்து) வேண்டிக் கொண்டு காத்திருக்க ...

அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல். வள்ளலார் வாழும் சிறு குடிசைத் தேடி வந்தாராம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... ்

அந்த குடிசை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் வாழ்ந்த சிறு அறையாகும்..

அந்த குடிசை ஓட்டை குடிசை....மழைவந்தால் ஒழுகும்.வெய்யில் வந்தால் காயும் அதுபோன்ற குடிசையாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து என்ன செய்தாராம் ! வள்ளலார் சொல்லுகின்றார்.

*எனக்கு நல்ல திருஅருள் அமுதம் வழங்கியதும் அல்லாமல்.*

நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்ததும் அல்லாமல்.என் ஊன் உடம்பு என்னும் குடிசையிலும் நுழைந்து உள்ளம் எனும் சிறு குடிசையிலும் நுழைந்தனையே ! என்னே உன் பெருங்கருணை என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்கின்றார்.

*எனவே அருள் வழங்குவது என்பது வேறு .அருள் பெறுவது என்பது வேறு..அருளாகவே மாற்றம் அடைவது என்பது வேறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !  வள்ளலார் உடம்பை அருள் உடம்பாக மாற்றி அந்த உடம்பிலே அமர்ந்து கலந்து கொள்வது என்பதுதான் உலக அதிசியம்*.

தனிப்பெருங் கருணையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து கலந்து கொள்ளும் அளவிற்கு...வள்ளலார் கருணையே வடிவமாக வாழ்ந்த காரணத்தினால்.வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியக் காரணத்தினால்..எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவித்தக் காரணத்தினால்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்து காரணத்தினால்.

கடவுள் தன்னையும். தன் உருவத்தையும்.தன் செயல் அனைத்தையும் காட்டினார்...

எனவே தான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உருவத்தையும் அதன் உண்மைகளையும் தெளிவாக வெளிப்படுத்தினார்...்

இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம்.

போன்ற அனைத்தும் சேர்ந்த ஒரே உருவம் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.. எவற்றிற்கும் ஈடு இணையற்ற தனிப்பெருங் கருணை உடையவராகும்...

கடவுள் இருக்கும் இடம் .இயங்கும் இடம் எங்குள்ளது என்பதை புறத்திலே காட்ட இயற்கை விளக்கமான ..*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* வடலூரில் தோற்றுவித்துள்ளார்..

இங்கே  சாதி.சமய.மதம் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்கபங்களான சமய மதம் சார்ந்த வழிபாடுகள் கிடையாது...

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டவர் களித்தவர் கலந்து கொண்டவர் வள்ளலார் மட்டுமே....

நாமும் வள்ளலார் போல் வாழ்ந்தால் வள்ளலார் பெற்ற பேரின்ப லாபமான  மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்..

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுத்த காரணம்  இறைவன் அருளைப்பெற்று அம்மயமாக மாற வேண்டும் என்பதற்காகவே கொடுக்கப்பட்டதாகும்.

நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்...

வள்ளலார் பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

மேலே கண்ட பாடலில் தெளிவான விளக்கத்தை எளிய தமிழில் தெரிவிக்கின்றார்....

நாம் பொய்யான சாதி.சமய.மதங்களின் கொள்கைகளை பற்று அற விட்டுவிட்டு வள்ளலார் காட்டிய சுத்தசன்மார்க்க ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே.அருளைப் பெற முடியும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.மரணத்தை வெல்ல முடியும் அவருடன் இணைந்து கொள்ளமுடியும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு