வெள்ளி, 12 ஜூலை, 2019

மாமிசம் மகா விஷம் !

*மகா + விஷம் = மாமிசம் சிந்திப்போம்❗ செயல்புரிவோம்❗*

உலகிலே கொடிய விஷம் மாமிசம் உண்பது...நமக்கேத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு முழுவதும் கலந்து மரணத்தின் வாயிலைத் திறக்கும் பாவச்செயலாகும்.

*இது அறிவையும் புத்தியும் கெடுத்து காமத்தையும்.மோகத்தையும் கோபத்தையும் தூண்டும்*

புலால் உண்பவர்கள் தேச துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள்.

*தாவர உணவைப் பற்றி ஓர் உண்மை*

*ஒவ்வொரு மிருகத்திற்கும் அதுவாக தேர்ந்தெடுத்த உணவிருக்கும்.*

*நீங்கள் ஒரு மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.*

*அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது.*

*அவைகளுக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்கும்.*

*அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.*

*ஆனால் மனிதனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.*

*மனிதன் அந்த உணர்வை முழுமையாகத் தொலைத்துவிட்டான்.*

*சில இடங்களில் மனிதர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.* சில இடங்களில் ஆடு.மாடு.கோழி.பன்றி போன்ற மிருக மாமிசத்தை சாப்பிடுகிறார்கள்.

*சில மனிதர்கள் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.*

*அவன் முற்றிலுமாக அறிவு குழம்பிப் போயிருக்கிறான்.*

*மனிதனுக்குப் பைத்தியம்.பிடித்துவிட்டது.*

*அவன் உடலில் இருந்து என்ன எதிரொலிக்கிறது என்பது தெரியாது.*

*மனிதன் இயற்கையிலேயே ஒரு சைவமாகத்தான் தாவர உணவை உட்கொள்பவனாக இருக்க வேண்டும்.*

*காரணம் முழு உடலுமே சைவத்திற்காக இறைவனால் உருவாக்கப்பட்டதுதான்.*

*சைவ மிருக உயிர்கள் அனைத்தும் நீரை உறிஞ்சித்தான் குடிக்கும் ஆனால் அசைவ உயிர்கள் அனைத்தும் நீரை நக்கித்தான் குடிக்கும்.*

*அசைவ உயிர்கள் அனைத்திற்கும் அதன் பற்கள் மிகவும் கூர்மையாக படைக்கப்பட்டிருக்கும் சைவ உயிர்கள் அனைத்திற்கும் பற்கள் மேற்புறம் தட்டையாக படைக்கப்பட்டிருக்கும*்.

*உலகில் ஒவ்வொரு அறிவியல் விஞ்ஞானியும் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.* ஆனாலும் வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார்கள்.

*மனித உடலின் முழு அமைப்புமே அவன் அசைவமாக இருக்கக்கூடாது என்பதைத்தான் காட்டுகிறது.*

*மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று சொல்கிறார்கள்.அது உண்மையோ.பொய்யோ அது ஒருபுறம் இருக்கட்டும். குரங்குகள் சைவம். சுத்த சைவம்.*

*டார்வின் உண்மையென்றால் மனிதன் சுத்த சைவமாகத்தான் இருக்க வேண்டும்.*

*இப்போது சில மிருகங்கள் சைவமா அசைவமா என்பதைப் பார்க்க வழிகள் இருக்கின்றன.*

*அது குடலைப் பொறுத்தது. குடலின் நீளத்தைப் பொறுத்தது.*

*அசைவ மிருகங்களுக்கு சின்ன குடல் இருக்கும். புலிகள், சிங்கம் இவற்றிற்கு சின்ன குடல்தான்.*

*அதற்கு காரணம் மாமிசம் என்பது ஏற்கனவே ஜீரணக்கிப்பட்ட உணவுதான்.*

*அதற்கு ஜீரணத்திற்கு நீண்ட குடல் தேவையில்லை.*

*ஜீரண வேலையை அந்த மிருகமே செய்துவிடும்.*

*இப்போது நீங்கள் மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடப் போகிறீர்கள். அது ஏற்கனவே ஜீரணம் ஆனது. பெரிய குடல் தேவையில்லை.*

*மனிதனுக்குத்தான் மிக நீளமான குடல்கள். அதாவது மனிதன் சைவம். ஒரு நீண்ட ஜீரணம் தேவை, அதில் தேவையற்றது நிறைய இருக்கும். அவற்றைத் சக்கையாக்கி மலமாக தள்ளிவிட்டு அதில் உள்ள முக்கிய திரவா அமுத்த்தை பிரித்து ஊட்ட வேண்டிய உறுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். எனவே மனிதனுக்கு குடல் நீளமானது..*

*மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.*

*இதனால் உடலுக்கு சுமை ஏற்றப்படுகிறது.*

*பெரிய ஞானிகள்...*

 *மகாவீரர்,*
*புத்தர்,*
*திருவள்ளுவர்*
*வள்ளலார்*

போன்ற அருளாளர்கள் மாமிச உணவை உட்கொள்வது விஷம் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்வதற்கு சம்மாகும் என்கிறார்கள்.

*அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்* மாமிசம் உண்பவன் ஐந்து பஞ்சமா பாதங்களையும் செய்ய துணிந்தவனாக மாறிவிடுவான்..அது அவனுக்கும் கேடு உலகத்திற்கும் கேடு விளைவிக்கும்.

*ஆனால்,*
*நீ உண்மையிலேயே ஆன்மாவைத் தொடர்பு கொள்ள ஆழ்ந்த சத்விசாரத்திற்கு செல்ல  நகர வேண்டுமானால், உனது உடல் எடையற்று இருக்க வேண்டும்.*

*இயற்கையாக எண்ணம் நகர வேண்டும்.*

*உங்கள் உடலிலிருந்து தேவையற்ற  பாரம் இறங்க வேண்டும்.*

*அசைவ உணவினால் உடலுக்கு அதிகமான கொழுப்பு என்ற அசுத்த பாரம் உண்டு*

*நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.*

*நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள்.*

*அந்த மிருகத்திற்கு என்னவாகிறது.?*

*யாருமே உயிர் போகும்படி கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.*

*வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுவார்கள்.*

*அதேபோல் விரும்பி தானாகவே எந்த மிருகங்களும் மற்ற உயிரினங்களும் உயிர்போவதற்கு விரும்புவதில்லை. *

*உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாக மாட்டீர்கள்.*

*ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்?* எவ்வளவு துடிதுடிப்பீர்கள்.

*நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேநிலைதான் உண்டாகும்.*

*வேதனை, பயம், துன்பம். வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம்.மரணம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.*

*அதன் உடல்முழுவதும் வன்முறை, வேதனை, மரண ஓலம் பரவும்.* அந்த உடம்பில் பதிவாகிவிடும்

*அந்த உடலைவிட்டு உயிர் பிரியும்போது உயிரின் துன்பக் குமரல்கள் முழுவதுமே  விஷமாக பெருக்கெடுத்து உடலின்சதைகளில் பதிந்துவிடும். அதுவே விஷத்தன்மை யாகும் அந்த விஷத்தை சாப்பிட்டால் மனித குணம் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்*

*காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.*

*பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள்.*

*அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் வேதனையும் சாபமும் இருக்கிறது.*

*அந்த முழு சக்தியுமே விஷம்தான்.*

*பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.*
       
*நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது.*

*அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.*

*ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது.*

*நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள்.*

*நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த  நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள்.இது இயற்கையின் நியதியாகும்.

*பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது.*

*ஒரு பதற்றம் எழுகிறது.*

*ஒரு மன வேதனை எழுகிறது.*

*எது ஒருவருக்கு இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ண வேண்டும்.*

*உங்களுக்கு எது இயற்கை என்றால்... பழங்கள், காய்கறிகள், தானியங்கள்.கீரைவகைகள், பருப்புகள் வகைகள்* போன்றவைகள்

*அவற்றை அளவுவோடு  உண்ணுங்கள்.* வளமோடு வாழலாம்*

*எது இயற்கையானதோ, அது தான் உங்களுக்கு ஒரு திருப்தியை கொடுக்கும்.*உயிரையும் உடம்பையும்.நோயின்றி காப்பாற்றப்படும்.

*அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும்.* மகிழ்ச்சி யைக் கொடுக்கும்.

*அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.*

*நீங்கள் அன்பு.தயவு.கருணை நிறைந்தவராக  உணர்வீர்கள்.*

*கொன்றால் பாவம்! தின்றால் போச்சு!*

*இதன் உண்மையான அர்த்தம்...*

*கொன்றால் பாவம் வரும்.உண்டால் உங்கள் புண்ணியம் போகும்*

இந்த உலகத்தில் எல்லா ஞானிகளையும் விட மிகவும் அழுத்தமாக புலால் உணவைப்பற்றி மக்களுக்குத் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளலார் .

உயிர்க்கொலை செய்பவர்களும் அதன் மாமிசத்தை உண்பவர்களும்.இறைவன் அருள் பெறும் தகுதி அற்றவர்கள் என்கிறார்.இறைவனைத் தொடர்பு கொள்ளும் அனுமதி அற்றவர்கள் என்கிறார்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை கொலை செய்வதற்கு எவருக்கும் உரிமைஇல்லை.தன் உயிரை தானே அழித்துக் கொள்ளவும் உரிமை இல்லை.என்கிறார்.

உயிர்க்கொலை செய்பவர்களை புற இனத்தார் எனவும்.செய்யாதவர்களை அக இனத்தார் எனவும் இரண்டு இனமாக குறிப்பிடுகின்றார்.

வள்ளலார் பாடல் !


தன் உயிர் உடம்பின் உண்மை அறியாமல் பிற உயிர்.உடம்பின் உண்மை அறியாமல் தவறு செய்கிறார்கள்.அவர்களுக்கு பண்பு என்பது தெரியாது.எக்காரணத்தைக் கொண்டும் அவனுக்குத் துணைபோக வேண்டாம்.அதே நேரத்தில்.அவன் உண்மை உணர்ந்து திருந்தி நன்மார்க்கமாம் சுத்த சன்மார்க்கதிற்கு வரும் வரை. பசி என்று வந்தால் உணவு கொடுத்து அவன் உயிரைக் காப்பாற்றுங்கள் என்கிறார் கருணையே வடிவமான வள்ளலார்.

*ஆகவே❗*

புலால் உண்ணும்
*மகா விஷத்தை தவிர்போம்...*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு வழிகாட்டுவோம்.

கொல்லா நெறியே குருவருள் நெறியென மக்களுக்குத் தெரியப்படுத்தி.

*தாவர உணவை உட்கொண்டு இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டுவோம்..

*மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைநிலையை அடைவதே மனித வாழ்க்கையாகும்.....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு