சனி, 6 ஜூலை, 2019

இறைவன் நம்மை இடைவிடாது நேசிக்கின்றார் !

*இறைவன் நம்மை இடைவிடாது நேசிக்கின்றார்.!*

இறைவன் யார் என்பது தெரியாமல் எல்லா தெய்வத்தையும் தொடர்பு கொள்கிறோம்.நேசிக்கிறமாதிரி நடிக்கிறோம்.

*உண்மை அன்பு.உண்மை தயவு.உண்மை கருணைக் கொண்டு நேசிக்க வேண்டும் !*

கடவுள் எங்கு உள்ளார் என்பதை விளக்கும் பாடல்....

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலை ஊன்றி படிக்கவும்.

எல்லாம் செய்யவல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம்.
என்னுயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்

நல்லார்க்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்

கல்லாற்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம் அருட் பூரணமாந் தெய்வம்

செல்லாத நிலைகள் எல்லாம் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம்..

மேலே கண்ட பாடலில் உண்மையான தெய்வம் யார் என்பதையும் அவர் எவ்வாறு இயங்கி விளங்கிக் கொண்டு உள்ளார் என்பதையும்.

கற்றவர் கல்லாதார்.மற்றும் எல்லா உயிர்களிலும் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து விளங்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மைக் கடவுளை வள்ளலார் கண்டு வெளிப்படையாக காட்டி உள்ளார்.

அந்த உண்மைக் கடவுள் நம்மை இடைவிடாது பாதுகாக்கின்றார் நேசிக்கின்றார்.

நாம் உண்மை அறியாது உண்மைக்கு புறம்பான பல தத்துவக் கடவுளைத் தேடி அலைந்து கொண்டு உள்ளோம்..

ஆகவே நாம் நிலைபெறாத இன்பம் துன்பம் என்னும் சோகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளொம்.

மகிழ்ச்சியும் களிப்பையும் இன்பத்தையும்  தரவல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மை இடைவிடாது நேசிக்கின்றார். நாமும் அவரை இடைவிடாது நேசிப்போம்..

அவர் நம் ஆன்மா இருக்கும் இடமான சிரநடுப் பகுதியான சிற்சபையில் இயங்கிக் கொண்டுள்ளார்..

வெளியே தேடாதீர்கள் கிடைக்கமாட்டார் உள்ளே தொடர்பு கொள்ளுங்கள் எல்லா நன்மையும் நினைத்த மாத்திரத்தில் உண்டாகும்...

அவர் எந்த முறையில் நம்மை காப்பாற்றுகிறார. என்பதை கீழே கண்ட பாடலில் தெரிவிக்கின்றார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்த பெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்

சேயாக எனை வளர்க்குந் தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் !

என்னும் பாடலை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார்..

படித்து அறிந்து தெரிந்து புரிந்து.அறிவு விளக்கத்தால் வாழ்ந்தால்.நாம் இறைவனை நேசிக்கிறோம் என்று கொள்ளப்படும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு