ஞாயிறு, 11 நவம்பர், 2018

வேதாத்திரி மகரிஷியின்விளக்கம் !

வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் !

வள்ளலார் என் உடம்பிலே உயிரிலே கலந்து உள்ளார் என்று சொல்லி உள்ளார்...

திரு அருட்பாவை நன்கு படித்துள்ளார்.சித்தர் நூல்களும் நிறைய படித்துள்ளார்....

மகரிஷி சுத்த வெளியே இறை நிலை என்று சொல்லி உள்ளார்.அவற்றை பின் பற்றுபவர்களும் அதையே சொல்லிக் கொண்டு உள்ளார்கள்..

மகரிஷியை குறை சொல்வதாக எவரும் நினைத்துவிடக் கூடாது..

மக்கள் தெளிவுபெற வேண்டும்

வள்ளலார் சொன்ன இறைவன் அருட்பெருஞ்ஜோதி ! அந்த உண்மைக்கடவுள் இருக்கும் இடம் இயங்கும் இடம் தான் அருட்பெருவெளி என்பதாகும்...

அருட்பெருவெளியை மகரிஷி சுத்தவெளி என்கிறார் தவறு இல்லை...சுத்தவெளி என்பது பஞ்ச பூதங்கள் அற்ற அருள் நிறைந்த பெருவெளி என்பதாகும்..

பெருவெளியே கடவுளா என்றால் இல்லை.!

அருட்பெருவெளியில் இயற்கை உண்மையே கடவுள் நிலை என்கிறார் வள்ளலார்..

கடவுளுக்கு மூன்று நிலை மூன்று தகுதிகள் உண்டு..

இயற்கை உண்மை !
இயற்கை விளக்கம்!
இயற்கை இன்பம் !

என்னும் நிலைகள் தகுதிகள் உண்டு...

இயற்கை உண்மை என்பதுதான் கடவுளின் உண்மையான முதல் நிலை.அதுவே அருட்பெருஞ்ஜோதி ....

இயற்கை விளக்கம் என்பது இரண்டாவது நிலை அதுதான் அருட்பெரு வெளி என்பதாகும். அதுதான் தனிப்பெருங்கருண என்பதாகும்.

அதைத்தான் மகரிஷி சுத்த வெளி என்கிறார்.முதல் நிலை மகரிஷிக்கு தெரிய வாய்ப்பில்லை போலும்..

இயற்கை இன்பம் என்பது மூன்றாவது நிலை..
எல்லாவற்றையும் அழிவில்லாத இன்பம் பெற... அடைய செய்விப்பதாகும்....

மனிதன் மட்டுமே இந்த மூன்று நிலைகளையும் அடையும் உன்னத தகுதிப் பெற்றவன்..

அந்த இயற்கை இன்பத்திலும் மூன்று நிலைகள் உள்ளன ..

இம்மை இன்பம்
இம்மை இன்பவாழ்வு..

மறுமை இன்பம்
மறுமை இன்பவாழ்வு...

பேரின்பம் பேரின்ப வாழ்வு...

என மூன்று தகுதி மூன்று வாழ்க்கை முறைகள் உள்ளன..

மூன்றையும் மூன்றுவிதமாக பிரிக்கின்றார்...
வள்ளலார்

பேரினப நிலை.பேரின்ப வாழ்க்கை நிலைதான் இறுதி நிலை அருட்பெருஞ்ஜோதி யை நேரடியாக தொடர்பு கொள்ளும் நிலையாகும்...

எல்லா வற்றுக்கும் காரணமாக உள்ளது தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்..

இயற்கை விளக்கம் இயற்கு இன்பம் என்பது காரிய நிலை என்பதாகும்...

இயற்கை உண்மை என்பது காரண நிலையாகும்.

காரியம் காரணமாகாது .
காரணம் எல்லாவற்றுக்கும் காரியமாகும்...

இதைத்தான் வள்ளலார் நடராஜபதி மாலையில் அருட் மாமாலையாக 34 பாடல்களில் விளக்கி உள்ளார் ! அனைத்தையும் படியுங்கள் தெளிவடையும்..

ஒருபாடல் !

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்

எல்லாஞ்செய் வல்லதாகி

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்

இயற்கையே இன்பமாகி

அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த

அருளாகி அருள்வெளியிலே

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்

அருட்பெருஞ் சோதியாகிக்

கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்

காட்சியே கருணைநிறைவே

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற

கதியே கனிந்தகனியே

வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே

வீற்றிருந் தருளும்அரசே

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே

மேவுநட ராஜபதியே. !

என்னும் பாடலிலே நடராஜபதியே என்பது அருட்பெருஞ்ஜோதி யை குறிப்பதாகும்.

வள்ளலாரே அருட்பெருஞ்ஜோதி நடராஜபதியே என்று பின் வரும் பாடலிலே தெளிவுபடுத்துகின்றார்.

பாடல் !

நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த

நண்ணுறு கலாந்தம்உடனே

நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்

ஞானமெய்க் கொடிநாட்டியே

மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்

முன்னிப் படைத்தல்முதலாம்

முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்

மூர்த்திகளும் ஏவல்கேட்ப

வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்

வாய்ந்துபணி செய்யஇன்ப

மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்

வளத்தொடு செலுத்துமரசே

சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே

துரியநடு நின்றசிவமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.!

சிதம்பரம் நடராஜரைத்தான் வள்ளலார் சொல்கிறார்  என்று மக்கள்  நினைத்து விடுவார்கள் என்பதால் அருட்பெருஞ்ஜோதி நடராஜபதியே! என தெரிவிக்கிறார்...

வள்ளலார் சொல்லி உள்ள கடவுள் இயற்கை உண்மைக் கடவுள்...அருட்பெருஞ்ஜோதி...என்பதாகும்.

மகரிஷி சொல்வது சுத்தவெளியை இறை நிலை என்கிறார்..

சுத்த வெளியில் கடவுள் உள்ளார்...வெளி என்பது வேறு ..கடவுள் என்பது வேறு...

மேலும் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தில் தெளிவுபட விளக்கம் தருகிறார்...

பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

என்னும் பாடலில் அருட்பெருவெளியில் அருட்பெரும் பீடத்தில்.அருட்பெரும் வடிவில் உள்ளவர் அருட்பெருஞ்ஜோதி அரசர் என்கிறார்..

மேலும் ஒருபாடல் !

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே

உன்னமுடி யாஅவற்றின்

ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்

உற்றகோ டாகோடியே

திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா

சிவஅண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்

சீரண்டம் என்புகலுவேன்

உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்

உறுசிறு அணுக்களாக

ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்

ஒருபெருங் கருணைஅரசே

மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா

வரந்தந்த மெய்த்தந்தையே

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.!

இப்பாடலில்.பொய் தந்தை இல்லை....மெய் தந்தையே என்கிறார் அருட்பெருவெளியில்  உறு சிறு அணுக்களாக ஊடசைய அவ் வெளியின் நடுநின்று நடனமிடும் ஒரு பெருங் கருணை அரசே !

மணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எல்லாம் வல்ல நடராஜ பதியே என்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி உண்மை நிலை தெரியாமல்..சாதி.சமய.மதவாதிகள் போல் மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

குழப்பவாதிகள் மத்தியில் சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையோடும் எச்சரிக்கையோடும் மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் ...

அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுளை அறிமுகப் படுத்தி விளக்க வேண்டும்..

இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் தருவேன் என்னுடைய பெருஞ் செல்வம் என் புகல்வேன் என்பார் வள்ளலார்

மேலும் எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்று என் தந்தை நின் அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் என்பார்...

வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல்படுவோம்...
அருள் பெறுவோம். மரணத்தை வெல்வோம்.

பேரின்ப லாபத்தை பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு