சனி, 17 நவம்பர், 2018

வள்ளலாரின் கொள்கைகள் ! மக்களின் குரல் !

வள்ளலாரின் கொள்கைகள் ! மக்களின் குரல் !

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் மக்கள் மத்தியில் அதி தீவிரமாக வளர்ந்து வருகின்றது..

வாதத்தாலும்.விவாதத்தாலும்.கருத்து மோதல்களாலும்.மக்கள் மத்தியில் திருஅருட்பா வேகமாக வளரந்து வருகின்றது..

இவற்றை எல்லாம் தினமும் ஊன்றி கவனித்து வருகிறேன்.

என்னிடம் வாட்ஸ்அப்பில்  தனிநபர்.மற்றும் குரூப்  900 தொள்ளாயிரத்திற்கும் மேல் உள்ளது..

பேஸ்புக்கில் மூன்று தலைப்புக்களில் சுமார் 15 ஆயிரம் பேர் உள்ளார்கள் அவரவர்கள்  குரூப்பில் ஆயிரக்கணக்கான நபர்கள் உள்ளார்கள்..

அதற்குமேல் வலைத்தளங்கள் உள்ளன..

இவை அனைத்திற்கும் கட்டுரைகள் தவறாமல் அனுப்பி விடுவேன்..

இத்தனையும் எவருடைய உதவியும் இல்லாமல்  நானே தினமும் செய்து கொண்டு வருகிறேன்..

சலிப்போ வருத்தமோ கவலையோ இல்லாமல் மகிழ்ச்சி யுடன் ஆனந்தமாக செய்து வருகிறேன்..

ஒரு நாளைக்கு நான் அனுப்பும் கட்டுரைகள் சுமார்  ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்களை சென்று அடைகின்றன.

பொற்காலம் !

இது சுத்த சன்மார்க்க பொற்காலம் என்பது தெளிவாகத் தெரிகிறது..

அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் எழுதும் கட்டுரைகளை இடைவிடாது லட்சோப லட்சம் மக்கள் படித்து வருகிறார்கள்...என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

சில சமய மத ஈடுபாடுள்ள சன்மார்க்க சான்றோர்களும்.மற்ற சமயம் சார்ந்த சான்றோர்களும் எதிர்ப்பும்.வாதமும் தெரிவிக்கின்றார்கள்.
என்பது அனைவருக்கும் தெரியும்.

தினமும் இடைவிடாது போனில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகிறார்கள்..

சில அன்பர்கள் !

வள்ளலார் கொள்கைகள் மற்றும் அவர் காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றியும்..திருமூலர்.
திருவள்ளுவர்.
நாயன்மார்கள்.
மற்றும் சித்தர்கள் மேலும்

வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள்.இதிகாசங்கள் எல்லாமே.
வள்ளலாருக்கு  முன்னாடியும் பல அருளாளர்கள் சொல்லி உள்ளார்களே என்ற வினாவும் எழுப்பி கேள்விக் கணைகளை கேட்பார்கள்..

வள்ளலார் கண்ட காட்டிய கலந்து கொண்ட அருட்பெருஞ் ஜோதிக்கும் மற்றவர்கள் சொல்லிய ஜோதிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பதை வள்ளலார் சொல்லிய ஆதாரத்தோடு தெளிவாக புரிய வைப்பதற்குள் நேரம் போவதே தெரிவதில்லை.

அவர்களுக்கு பொறுமையாக புரிய வைக்கவே தினமும் நேரம் போதவில்லை..

இடையில் இரவில் தான் கட்டுரை எழுத முடிகிறது.

கேட்காத கேள்வி எல்லாம் கேட்பார்கள் அவர்களுக்கு புரியும்படி சொல்லி புரிய வைப்பதே எனது கடமையாகக் கருதி புரிய வைக்கிறேன்...

இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எனக்கு கொடுத்த வரமாகக் கருதுகிறேன்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட தூங்க வாய்ப்பில்லை...

இரவு 12 மணிக்கு எல்லாம். வெளிநாட்டில் இருந்து அன்பர்கள் போனில் தொடர்பு கொள்வார்கள்
அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரவர்கள் சந்தேகங்களை தெளிவடைய செய்விப்பது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும்.அவர்களும் மகிழ்ச்சி யுடன் புரிந்து கொள்கிறார்கள்...

இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால்... என்னைப்போல் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் தங்கள் சன்மார்க்க பணிகளை செவ்வென செய்து வருகிறார்கள்...

அவர்களையும் பாராட்ட கடமை பட்டுள்ளேன்.

*அனுபவத்தைக் கேட்பார்கள் !*

சில அன்பர்கள் என் அனுபவத்தைக் கேட்பார்கள்..அதை மட்டும் வெளியில் சொல்ல மாட்டேன்.

இன்னும் ஏற வேண்டிய படிகள் நிறைய உள்ளன.எனவே தம்பட்டம் அடிக்கக் கூடாது என்பது என் எண்ணம்...

நான் சராசரி மனிதனாகவே.
சகஜமாக உங்களிடம.உரையாடிக் கொண்டு இருப்பதே மகிழ்ச்சி யாக கருதுகிறேன்.

யாரும் வருத்தப்பட வேண்டாம்..

மேலும் தமிழகத்திலும்.வெளி மாநிலங்களிலும்.வெளிநாடுகளிலும் சன்மார்க்க சங்கங்களை தோற்றுவித்து ..அன்னதான பணிகளும் சுத்த சன்மார்க்க சொற்பொழிவுகளும் செய்து வருகிறார்கள்.

உலகம் எங்கும் வள்ளலார் கொள்கைகள் அதிதீவிரமாக சென்று கொண்டு உள்ளன..

இனி சுத்த சன்மார்க்க காலம் என்று வள்ளலார் சொல்லியது.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வாக்கு என்பது வெட்ட வெளிச்சமாக பிரகாசிக்கின்றது.....

வள்ளலார் பதிவு செய்துள்ளது !

மெய் ஒன்று சன்மார்க்கமே தான்---என்றும் விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீ தான்

செய் என்று தந்தது பாரீர் --திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி !

ஜோதியுட் ஜோதியுட் ஜோதி -சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுட் ஜோதி

ஜோதியுட் ஜோதியுட் ஜோதி!

என்று ஆனந்தக் களிப்பு  -3 ஆம் பகுதியில் வள்ளலார் சொல்லி உள்ளார்...

மேலும்
*ஆனந்த மேலீடு*
 என்ற தலைபில்

அருள் அற்புதமான பாடல்கள் !

எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பதிவு செய்து உள்ளார்..

பொருமையாக படித்து தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்..

பாடல்கள் !

ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.

கண்ணிகள்

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்

சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

5. சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

கலிவிருத்தம்

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே !

என்ற பாடல்களில் சுத்த சன்மார்க்க கருத்துக்களை மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார்..

படித்து பயன் பெறுவோம்...

மேலும் ஒரு பாடல் !

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண

இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்

சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே

என்மார்க்கம் காண்பேன் இனி.!

*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் !*

தடை அற்ற பெருநெறி வள்ளலார் விதைத்த  சுத்த சன்மார்க்கம்..

எல்லா உலகும் நன்மை பயக்கும்...அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணை !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஒங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு