புதன், 25 ஜூலை, 2018

மாமிசம் உண்பதால் உண்டாகும் வெறி குணம்!

மாமிசம் உண்பதால் உண்டாகும் வெறி குணம் !

வள்ளலார் சொல்லுவதை கவனித்து படித்து உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டுவது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமை.ஆன்ம நேய உரிமையாகும்..

பஞ்ச மகா பாதகங்கள் !

பஞ்ச மகா பாதகங்கள்.ஐந்து.

கள், காமம், கொலை, களவு, பொய் -

இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும்

***கொலை விசேஷ பாவம்***

எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது,

கொலை செய்யத் துணிவு வாராமலிராது,

களவு செய்யாமலிரான்,

பொய் பேச அஞ்சான்.

ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவ னானாலும் மற்றவை தொடாமல் இருக்க மாட்டான்...

மேலே கண்ட ஐந்து மகா பாதகங்களும் அவன் உண்ணும் உணவினால் தான் உண்டாகிறது....

மாமிசம் உண்பவன் இந்த ஐந்து மகா பாதகங்களை  செய்வான்..

உண்ணும் உணவினால் மனிதனுடைய குணங்கள் மூன்று வகை யாக மாற்றம் அடைகின்றது.
...
****சத்துவ குணம்
*****தாமச குணம்
*****ராட்சத குணம்...

1.தாவர உணவு களான கீரை.காய்கறிகள் மட்டும் உண்பவருக்கு சத்துவ குணம் உண்டாகும்.அதாவது தன்னை உணர்ந்து அதிக விகாரமான தவறுகளை செய்யாமல்.
மனசாட்சிபடி
வாழ்வார்கள். பிறருக்கு  நன்மை செய்பவர்களாக இருப்பார்கள்.தானாக நிற்றல் சத்துவகுணம்,

2.ராகத் துவேஷ சம்பந்தமுடையது ராஜசம்,குணம்

பால் தயிர் மோர்.நெய் கிழங்குகள் வகைகள் பருப்பு வகைகள் அதிகம் உண்பவர்கள் ராட்சத குணம் உடையவர்கள் சுய நலம் அதிகம் உடையவர்கள்.

3.தாமசம் குணம் ..ஆடு மாடு கோழி பன்றி போன்ற உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பவர்களுக்கு உண்டாகும் குணம் தாமச குணம் என்பதாகும்..

ஆன்மாவின் இயற்கை குணங்களை அறிந்து கொள்ள முடியாமல்
செயற்கை குணங்களால் தவறு செய்பவர்கள்.மாமிசம் உண்பவர்கள் மட்டுமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்..

மாமிசம் உண்பவர்கள்.கொலை.கொள்ளை.கற்பழிப்பு..
தீவரவாதம்.பயங்கரவாதம்.கள்ளகடத்தல்.நாடு கடத்தல்.நக்சல் பார்டி போன்ற கொடூரமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் மாமிசம் உண்பவர்களாகத்தான் இருப்பார்கள்....

இன்று பச்சிளம் குழந்தைகளை.பலபேர் சேர்ந்து கற்பழிக்கும் காம கொடூர்ர்கள் எல்லாம் மாமிசம் உண்பவர்களே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

எல்லா குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணம்...போலியான சாதி.சமய.
மதங்களினால்  வழிகாட்டும்  ஆன்மீகம்..

அரசியல்.
சினிமா..Tv உணவு விளம்பரம்.மற்றைய விளம்பரம்.Tv சீரியல்..தேவையற்ற நாகரீகம்.உணர்ச்சியை தூண்டும் ஆபாச படங்கள்.ஆபாச ஆடைகள். ஆபாச நடனங்கள்.தேவை அற்ற உணவு வகைகள் எல்லாமே ஒட்டு மொத்த குற்றங்களுக்கு காரண மாக இருக்கின்றது...

இவற்றை எல்லாம் பார்த்து *"காதல் என்னும் போதையில்** ஆண்.பெண் முதியவர் போன்ற அனைவரும் ஆடுமாடுகள் போல் திரிகின்றார்கள்.

உயிர்களை கொலை செய்து புலால் உண்பது.மன்னிக்க முடியாத பெரிய குற்றம்  என்பதை வள்ளலார் தான் துணிவுடன் உலக மக்களுக்கு சொல்லி உள்ளார்.....

*ஒரு பெண்ணை கற்பழிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பது போல....வாய் பேசாத.தெரியாத  ஆடு.மாடு்.கோழி.பன்றி போன்ற உயிர்களை துடிதுடிக்க கொன்று திண்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்..*.

ஒரு பெண்ணை கற்பழிப்பதும்.ஒரு உயிரைக் கொன்று தின்பதும் சம்மான குற்றமேயாகும் ...

வள்ளலார் மனிதர்களை இரண்டு பிரிவாக பிரித்துள்ளார்..

புலால் உண்பவர்கள்..
புலால் உண்ணாதவர்கள்
என இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளார்

வள்ளலார் பாடல் !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிகபரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.!

என்று தெளிவாக பதிவு செய்துள்ளார்.ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்....

புலால் உண்பவர்களுக்கு அறிவு தெளிவு இருக்காது.அவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.சிந்திக்க மாட்டார்கள்.அவர்கள் நல்வழிக்கு வரும் வரை அறிவுரை சொல்ல வேண்டாம்...

பசி என்று வந்தால்.
பசியைப்போக்க தயவோடு உணவு கொடுங்கள் என்கிறார்

ஏன் அப்படி சொல்கிறார் என்றால்..இறைவன் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதால்..ஒரு உயிரைக் கொலை செய்வதால் ஆன்மா துடிதுடித்து வெளியேறுகிறது...அது மன்னிக்க முடியாத குற்றமாகும் பெரியப் பாவச்செயல் என்கின்றார்...

வள்ளலார் பாடல் !

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்பதை  நான் அறிந்தேன் அதனால்.ஆனமநேய உரிமையுடன் சொல்கின்றேன் என்கின்றார்.

எனவே தான் சுத்த சன்மார்க்கம் என்னும் பொது நெறியைத் தோற்றுவித்துள்ளேன்..

சுத்த சன்மார்க்கத்தில் உள்ள.இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே.உலகமும் உலகத்தில் உள்ள மனிதர்களும்.குற்றம் செய்யாமல் மனிதன் மனிதனாக மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்..

இன்னும் விரிக்கில் பெருகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு