செவ்வாய், 16 ஜனவரி, 2018

சமய சின்னங்கள் !

சமய சின்னங்கள் !
கடவுளைப் பற்றி விமர்சனம் செய்யும்.ஆன்மீகப் பெரியவர்களே!   உயர் ஜாதி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் பெரியவர்களே.சாதியை.சமயத்தை.மத்த்தை யாரால் பிரிக்கப் பட்டது.
சாதி.சமயம்.மதங்களை கடவுளா பிரித்து வைத்தார்.இந்தியாவில் வைணவம் .சைவம் என இரண்டு சமயங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு   கடவுளைப் பற்றி கற்பனை கதைகளைப் படைத்து . வேதம் .ஆகம்ம்.புராணங்கள்.இதிகாசங்களை காவியங்களாக படைத்து போட்டிப் போட்டு வழிபாடு செய்து வருகிறீர்கள்..
(வெளிநாட்டு சமய மதங்களும் சேர்த்துதான் சொல்லுகிறோம்) .
எது உண்மை எது பொய் என்று.இன்றுவரை எவருக்கும் தெரியாத குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.
சாதாரணமாக நெற்றியில் வைக்கும் சமயச் சின்னத்தில் கூட ஒற்றுமை இல்லை யானைக்கு நெற்றியில் நாமம் போடுவதா ? விபூதி அணிவதா ? என்ற போட்டியில் தீர்ப்பு வழங்காமல்  இன்று வரை நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன.
எல்லா மதங்களிலும் புற சின்னங்களை வைத்து தங்கள் யார் ? என்று  அடையாளப் படுத்திக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள்.அதுதான்  சமய  மத வெறி என்பதாகும்.
கடவுளைப் பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவைப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்...
வள்ளலார் கொள்கையை மக்களுக்கு தெரியவொட்டாமல் செய்தவர்களே இந்த சமய.மதவாதிகள் தான்.இப்போது உண்மை வெடித்து வெளியே வந்து கொண்டு உள்ளன.
வள்ளலார் பாடல்கள் பல ஆயிரம் உள்ளன.அதிலே சில.!
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே
கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்
அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!
இந்த ஒரு பாடலே போதும்  ஊன்றி படியுங்கள் உண்மை விளங்கும்...மேலும் ஒருபாடல்.
வேதம்  ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதம் ஆகமத்தின் விளைவறியீர் - சூதாகச்சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை. !
வேதம் ஆகம்ம்  புராணம் இதிகாசம் எல்லாம்  உண்மையை  வெளிப்படையாக சொல்லாமல் சூதாக கற்பனைக் கதைகளாக சொல்லி உள்ளார்கள் அவைகளால் எந்த பயனும் லாபமும் இல்லை என்கிறார் வள்ளலார். மேலும்.
வேதநெறி ஆகமத்தின் நெறி பவுரா ணங்கள்விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டிஉள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன்
என்னொடுநீ புணர்ந்தேதீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!
எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்.எனக்கு எல்லா உண்மைகளையும்  வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். நான் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்து கொண்டேன்.
எல்லோருக்கும் பொதுவான  ஒரே கடவுள்  அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்ற  உருவமற்ற அருள் ஒளியாகும்.
நீங்களும் தெரிந்து கொள்ள எந்த தடையும் இல்லை.

சாதி.சமயம்.மதம்.போன்ற வெறிப்பிடித்த கற்பனைக்  கொள்கைகளை  விட்டு ஒழித்து வெளியே வந்தால் தான் உண்மைகள் தெளிவாக விளங்கும்.
அதுவரை ஆண்டாள் போன்ற விமர்சனங்கள் .அதற்கும் மேலான விமர்சனங்களும் வந்து கொண்டேதான் இருக்கும்.இவை இன்று நேற்று அல்ல .பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டேதான் வந்து கொண்டு உள்ளன.
இதில் இருந்து  வெளியே வருவதற்கு ஒரே வழிதான்.அதுதான் வள்ளலார் தோற்றுவித்த "" சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்"" என்ற பொது நெறியாகும்......
வள்ளலார் பாடல் !
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!
என்ற பாடலை ஊன்றி படித்து உண்மை உணர்ந்து பயன் பெறுவதே மக்களுக்கு நன்மை பயக்கும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு