திங்கள், 15 ஜனவரி, 2018

கடவுள் ஒருவர் தான் !

கடவுள் ஒருவர்தான் ! அவர் அருட்பெருஞ்ஜோதி மட்டும் தான் !

பாடல் !
உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்ஒருவ ரேஉளார் கடவுள்

கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றிஇருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும்

இயலும் ஐவர்கள்என்றும் எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.!

என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெரியப் படுத்துகின்றார்.

ஒரு உடம்பில் உயிர் ஒன்று இருக்குமா ? அல்லது  இரண்டு. மூன்று. ஐந்து உயிர் இருக்குமா ? 

ஒரு உடம்பில் ஒரு உயிர் தான் உள்ளது .என்பது சின்னக் குழந்தைக்கு கூடத் தெரியும்.

உடம்பில் ஒரு உயிர்தான் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ.அதேபோல் கடவுள் ஒருவர் தான் என்ற உண்மை ஏன் தெரியாமல் போனது என்று வினா எழுப்பி விளங்க வைக்கிறார் வள்ளாலார்.

சுயநலம் உள்ள  ஆன்மீக வாதிகள் தத்துவங்களை எல்லாம் கடவுள்களாக்கி மக்களை அலைய விட்டு விட்டார்கள்.அதனால் உண்மைத்  தெரியாமல் மக்கள் கண்டதை எல்லாம் கடவுள் என்று நினைத்து வழிபாடு செய்கிறார்கள்.

இனிமேலாவது கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து.

ஒவ்வொரு இல்லத்திலும் ஜோதி ஒன்றையே வைத்து வழிபாடு செய்யுங்கள். எல்லா நன்மையும் சந்தேகம் இல்லாமல்.வீண் செலவு இல்லாமல் நல்லதே  நடைபெறும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு