செவ்வாய், 9 ஜனவரி, 2018

பணம் !

பணம் !

தன் வருமானத்திற்கு மேல் சொத்து வைத்து  இருப்பவர்கள் தேச துரோகிகள்.கடவுள் கொள்கைக்கு விரோதமானவர்கள்.

கடவுள் கட்டளைக்கு  எதிரானவர்கள். 

அதனால் நீங்கள் எவ்வளவு பொருள் சேர்த்து வைத்து இருந்தாலும் மரண்ம் வந்து உடம்பை விட்டு .உயிரும்.ஆன்மாவும் பிரியும் போது ஒரு சிறிய துரும்பை கூட  எடுத்து கொண்டு செல்ல முடியாது.

இவற்றை தெரித்தும் தவறு செய்பவர்களுக்கு  அடுத்த  மனித பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லை.

சண்டாளப் பிறப்பு கிடைத்து அளவிள்ளாத துன்ப்ப் படுவார்கள்.

எனவே தான் வள்ளலார் ஆன்ம நேயம் கொண்டு நமக்கு நல்வழியைக் காட்டுகின்றார்.

நம்மிடம் உள்ள பொருள்களை .நமக்குத் தேவை போக மீதி உள்ளதை .ஆதரவு அற்ற ஏழை எளியவர்களுக்கு உபகாரம் செய்து .புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள் என்கிறார்.

ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணை போட அறியீர்
அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்..
கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர்
கூற்று தைத்த சேவடியை போற்றி விரும்பீரே ....என்றும்

காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டு கடுகு விரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடு விட்டுப் போயினபின் எது புரிவீர் எங்கே குடி இருப்பீர் அய்யோ நீர் குறித்து அறியீர் இங்கே

பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்.பட்டது எல்லாம் போதும் இது பரமர் வரு தருணம்

ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர் .உண்மை உரைத்தேன் அல்ல உண்மை உரைத்தன்னே...

என்கிறார் வள்ளலார்..

ஈடு கட்டுவது தான் ஏழைகளுக்கு உபகாரம் செய்வதாகும். அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம்.என்பதாகும்.அதை கடைபிடிப்பதற்குப் பெயர் தான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்..

ஜீவ காருண்ய ஒழுக்கம் இல்லாதவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வது இல்லை.

எனவே ஆன்நேய சகோதர்கள் அனைவரும் பணத்தின்மேலும் பொருளின் மேலும்அதிக பற்று இல்லாமல். தேவைக்கு மேல் உள்ளதை. ஆதரவு அற்ற ஏழைகளுக்கு வாரி வழங்கிவிடுங்கள்.

அதனால் பெரிய புண்ணியம் கிடைத்து அருளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.அதற்குமேல் மரணத்தையே வெல்லும் வாய்ப்பை இறைவன் அருள்வார்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு