திங்கள், 25 செப்டம்பர், 2017

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு !

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு !

வரலாற்று சிறப்புமிக்க அகில உலக சமரச சுத்த சன்மார்க்க முதல் மாநாடு சன்மாரக்க அன்பர்களின் கூட்டு முயற்சியால். சென்னை  கலைவாணர் அரங்கில் அக்டோபர் மாதம் 5/6 ஆம் தேதிகளில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

அகில உலக சமரச சுத்த சன்மார்க்க  சங்க மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல் இன்று இரவு வெளியிடப்படுகிறதுஎன்பதை பெரு மகிழ்ச்சியுன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதிலே சில சன்மார்க்க அன்பர்கள் அரசியல் சம்பந்தமான விழாபோல் தெரிகிறது என்நினைக்கிறார்கள்.

இந்த மாநாடு முழுக்க முழுக்க வள்ளலார் கொள்கை சம்பந்தமான மாநாடு.

அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் சம்பந்தமானவர்களுக்கும் வள்ளலார் யார் ? அவர் கொள்கைகள் என்ன என்பதை அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்கத்தோடுதான் அவர்களை அழைத்துள்ளது.மற்றபடி எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று அருள் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் வள்ளல்பெருமகனார்அவர்கள்

 உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு வாழும் வழியை காட்டிய வள்ளலார் கொள்கைகள் சன்மார்க்கிகள் மட்டுமே தெரிந்து கொண்டால் போதாது. உலகில் உள்ள அனைத்து சாதி சமயங்கள் மதங்கள் அரசியல் சம்பந்தம் உள்ளவர்கள.அனைவருக்கும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையும் உரிமையும் ஆகும்

வேறு எந்தவிதமான தவறான உள் நோக்கமும் இந்த மாநாட்டுகுழுவிற்கு இல்லை என்பதை உண்மையாக சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநாடு சிறப்புடன் நடைபெற அனைத்து உலக சன்மார்க்க அன்பர்களையும் உதவிகளையும்  செய்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்படைய வேண்டுமாறு தாழ்வணங்கி வருக வருக  வரவேற்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !.

அன்புடன்
மாநாட்டுக்குழு மற்றும்
ஈரோடு கதிரவேல்
9865939896.
ISO அண்ணாதுரை.
9790787838

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு