வெள்ளி, 29 செப்டம்பர், 2017

மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் !

மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் !

வள்ளலார் யார் ?

வள்ளலார் என்ற மனித உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்தவர் தான் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.

இந்த உண்மையை மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்களை மிருகங்களாக மாற்றியது எவை என்றால்  இதுவரை  இருந்த ஆன்மீக வரலாறுகள்.

மக்கள் எப்போதும் நல்லவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள்.

அவர்களை ஆன்மீகம் என்ற பெயரில் பஞ்சமா பாதகங்களான கள்.காம்ம்..களவு.கொலை பொய் போன்ற தீய செயல்களைச் செய்யத் தூண்டியது தான் பொய்யான.உண்மை அறியாத ஆன்மீகம்...

சாதி.சமயம்.மதம் என்ற பெயரில்  பொய்யான கற்பனைக் கதைகளையும்.அதில் உள்ள பொய்யான கதாப்பாத்திரங்களைத் தெய்வமாக வைத்து .உண்மையான தெய்வங்கள்  என்று நம்ப வைத்து மக்களுக்கு தவறான வழிபாடு முறைகளை காட்டி அறியாதவர்களாக மாற்றி  விட்டார்கள்.

உலகத்தைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சும்மா இருப்பாரா ?   உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் உண்மை அறியாமல் பொய்யைப் பிடித்துக் கொண்டு பொய்யான வழிபாடுகளை பின்பற்றி அழிந்து கொண்டு உள்ளார்கள்.

மனித இனத்தை காப்பாற்றவே வள்ளலார் என்ற உருவம் தாங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்து உள்ளார்.அவர் வந்து 195 ஆண்டுகள் ஆகின்றன.

வள்ளலார் வருவிக்க உற்ற தினமான அக்டோபர் 5/6 ஆம் நாளை கொண்டாடும் விதமாக. அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமானது் ISO் அண்ணாதுரை அவர்களின் தீவிர முயற்ச்சியால்.சன்மார்க்க அன்பர்களின் துணையோடு சென்னை கலைவாணர் அரங்கில் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாடு சிறப்புடன் நடைபெற  எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டி விண்ணப்பம் செய்து வேண்டுகிறேன்.

மாநாட்டிற்கு என் அறிவு சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பலபேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீஎன்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியேநிரள்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதிநட ராஜபதியே.!....

நடராஜபதிமாலை.ஆறாம் திருமுறை...திருஅருட்பா ..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
9865939796.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு