புதன், 16 நவம்பர், 2016

பிரதமர் மோடியின் அறிவிப்பு !

ஒரு நண்பர் கேட்டார் !

பிரதமர் மோடியின் அறிவிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ,

ஐந்நூறு ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பு மிகவும் அவசியமானதாகும் .

சாதாரணமான ஏழை நடுத்தர  மக்களின் நன்மைக்காகவும் ,நாட்டின் வளர்ச்சிக்காகவும் ,அறிவிக்கப்பட்டதாகும் .

நாம் ஒவ்வொரு நாளும் உழைக்கும் உழைப்பும் மறைமுகமாக  கோட்டீஸ்வரன் வங்கியில் குவிந்து கொண்டு உள்ளது ,

அவர்கள் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாட்டையே விலை பேசுகிறார்கள் ,

விலை நிலங்கள் எல்லாம் அவர்களின் வியாபார கிடங்குகளாகவும் ,அடுக்கு மாடி கட்டிடங்களாகவும்  மாறிவிட்டன ,விவசாய நிலங்கள் கருப்புப் பண திமிலங்கள் வசம் சென்று கொண்டு உள்ளன .

பணம் வைத்து இருப்பவன் எல்லாம் அரசியலில்  MLA ,MP.,மந்திரிகளாக மாறிவிட்டார்கள் ,கள்ளக்கடத்தல் ,கொள்ளை ,கருப்பு பணம் ,பதுக்கள்  மற்றும் போலிகள் எல்லாம் திரைப்பட தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள் .இவர்கள் எல்லாம் ,அரசியல்வாதிகளின்  துணையாக நாட்டையே சுரண்டிக் கொண்டு உள்ளார்கள் ,

மேலும் கள்ள நோட்டுக்கள் நாட்டில் பரவலாக நுழைந்து விட்டன .

இவற்றை எல்லாம் எப்படி தடுப்பது .எதாவது ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து தான் ஆகவேண்டும்

இவற்றை தடுக்க எந்த அரசும் முடிவு எடுக்க முடியாமல் ,திணரிக் கொண்டு இருந்தார்கள் .

மோடி அவர்கள் மிகவும் துணிச்சலாக இந்த நல்ல  முடிவு எடுத்து உள்ளது பாராட்ட வேண்டிய தாகும் ,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற உள்ளது _

இதை அரசியல் வாதிகளும் மீடியாக்களும் மக்களுக்கு சிரமமாக உள்ளது  என்ற வதந்திகளைப் பரப்பிக் கொண்டு உள்ளது .

இன்னும் சில மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் .

அதுவரையில் மக்கள் பொருமையாகவும் சிக்கணமாகவும்  வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.

இந்த  சிரமத்தை மக்கள் பொது நோக்கத்திற்காக பொருத்துக் கொள்ள வேண்டும் .

ஆரம்பம் சிரமம் அடுத்தது மகிழ்ச்சி என்பது உண்மை

    மக்கள்  எல்லாம் நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தை வருவித்துக் கொள்ள வேண்டும்

இது வள்ளலார் அறிவித்த  சன்மார்க்க காலம் அதனால் இதுபோன்ற நல்ல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு