சனி, 12 நவம்பர், 2016

மக்களைத் திட்டவில்லை !

மக்களைத் திட்ட வில்லை !

மனித குலத்தை  அழித்துக் கொண்டு இருக்கும்  மூட நம்பிக்கைக்கும் ,அறியாமைக்கும்   காரணமே  சமய மதங்களின்  கொள்கைகள்தான்  ,

 அதனால்   வள்ளலார்  சமய மதங்களைத்   தோற்றுவித்தவர்களை   சாடுகின்றார்  .அதை  அறிந்த  சுத்த சன்மார்க்கிகள்  வள்ளலார்   சொல்லிி கருத்துக்களை  கொள்கைகளை மக்களுக்கு   சொன்னால்  வருத்தப்பட  வேண்டிய  அவசியம் இல்லை  .

உண்மையான கருத்துக்களை   வெளியில் சொல்லாமல்  மறைத்து வைப்பது     தான்  குற்றம்.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் என்கிறார் வள்ளலார் .சாதியும் சமயமும் மதமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி !என்கிறார்

 உண்மையை அறிந்து கொள்ள சாதி சமயம் மதம் போன்ற கொள்கைகள் தான் தடை யாக உள்ளது  . என்பதை மக்களுக்கு  உணர்த்துவதற்கு கடமை பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .  சுத்த  சன்மார்க்கிகள்  சாதி  சமயம் மதங்களின்   தவறுகளை  எடுத்து உரைப்பது  தவறு அல்ல   .

அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவரின்   பெருமையும்    உண்மையும்  அருளையும்  அனைத்துத்  தர மக்களும்  அறிந்து கொள்ள வேண்டும் ,அதனை அறிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்   என்பதுதான்  சுத்த சன்மார்க்கிகளின்   விருப்பமாகும் .

ஏனோ  ஒரு சிலருக்கு சமய மதக் கொள்கைகளை  குறை சொன்னால்  வருத்தமாக  இருக்கிறது .அவர்கள்  .உண்மையை  அறிந்து கொள்ளாமல்  பொய் மீது  அதிகம்  பற்று  வைத்து உள்ளார்கள்  .அதனால்  அவர்கள்  திருந்துவதற்கு  காலம்தான்   பதில் சொல்ல வேண்டும்  .

எதிலும் பொது நோக்கம் வேண்டும்  என்பார் வள்ளலார் .  பொது நோக்கம் வந்தால் எல்லாம் தானே  புரிந்து   தெரிந்து கொள்வார்கள் .

  எல்லா  உயிர்களையும்  தன்  உயிர்போல்  அறிந்து கொள்வதே  பொது  நோக்கம்  .அதை  அறிந்து கொண்டவன்  எவனோ அவனே  ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமைக்குத்  தகுதியானவன்  .

அவனை மட்டுமே   அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர்  ஏற்றுக்  கொள்வார் .அறிவைத் தெளிவு படுத்துவார்  .அருளை வாரி வழங்குவார்

எனவே  உலகில் உள்ள எல்லா சமய மதங்களும் அதன் கொள்கைகளும்  பொய்யானவைகள் . அவற்றை  தோற்றுவித்தவர்களும்  பொய்யானவர்கள்  அவற்றை பின் பற்றுபவர்களும்  அறியாதவர்கள்  .

வள்ளலார்  சொல்லிய உண்மையான சுத்த  சன்மார்க்க  கொள்கைகள்  மட்டுமே மக்கள் பின் பற்றி வாழ வேண்டும்  என்பதே இறைவன்  அறிவித்துள்ள சட்டம் . சட்டத்தை மீறுவது  பெரிய குற்றம் .

குற்றத்திற்கு  தண்டனை   மரணம் ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன்  ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு