வெள்ளி, 2 செப்டம்பர், 2016

ஆன்மாவின் குடும்பம் !

ஆன்மாவின் குடும்பம் !

 ஆன்மாவின் மனைவிமார்கள்   மூன்று பேர் .அவர்களின் பெயர் ஆணவம் ,மாயை ,கன்மம் . . . . . .அவற்றைத்தான் மூன்று மலங்கள் என்பதாகும் .

முதல் மனைவி ஆணவத்திற்கு பிறந்தது ஒரு குழந்தை அதன் பெயர் அஞ்ஞானம் என்றும் ,   ஜீவன் என்றும்  உயிர் .என்றும் சொல்வதாகும் .

இரண்டாவது மனைவி மாயையைக்குப்  பிறந்த குழந்தைகள் நான்கு, அவர்கள் பெயர்  ,மனம் புத்தி, சித்தம் ,அகங்காரம் என்பபவர்களாகும்

மூன்றாவது மனைவி காமியம் என்னும்  கன்மத்திற்குப் பிறந்த குழந்தைகள் சத்துவம் ,ராஜசம் ,,தாமசம் என்னும் மூன்று குழந்தைகள் அவைதான் மூன்று  குணங்கள் .என்பதாகும் ,

குடும்ப உறுப்பினர்கள் ஆன்மாவை சேர்த்து 12, பணிரண்டு நபர்கள் .

வாடகை வீடு !

இந்த உலகத்தில் ஆன்மாவின் குடும்பம்  வாழவதற்கு வீடு வேண்டும் .வீடுதான் உடம்பு அதற்கு வாடகை வீடு(குடிக்கூலிவீடு)  என்று பெயர் ,இந்த வீட்டின் தலைவர் கள் மூன்று பேர் ,அவர்களின் பெயர் ,வாத பித்த சிலேஷ்மம் என்பதாகும் ,

 ஆன்மா  குடித்தனம் நடத்த தினமும் மூன்று வேலையும் உணவு என்னும்  பொருள்  வாடகையாக கொடுக்க வேண்டும் .

வாடகை வசூல் செய்பவர்கள் மூன்று பேர் ,அவர்கள பெயர்் வாத பித்த சிலேஷ்மங்கள் என்னும் தயவே இல்லாதவர்கள் .

பிண்டம் என்னும் பெரும் கூலி வாங்குபவர்கள் .இவர்கள் செய்யும் கொடுமைகள் அளவில் அடங்காதது ,இவர்களுக்காக உழைத்து உழைத்து வாழ்நாள் எல்லாம் வருந்தி வருந்தி ,அலைந்து அலைந்து ,திரிந்து திரிந்து ,வயது முதிர்ந்து நோய் வாய்பட்டு இறுதியில் மரணம் வந்து வழி தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வாழந்து கொண்டே உள்ளோம் .

மதவாதிகள் வருகை !

மற்போர்க்கு கருதி வந்தவர் போல
ஒதும் வேதாந்தம் உரைப்பவர் சிலபேர்

வாள் போருக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்

தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்

உலக்கைப் போரை உற்றார் போல
 இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்

கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்

வாய்ப் போருக்கு வந்தவர் போல
விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வந்தவர் போல
மத தூஷணைகள் வழங்குவர் சிலபேர்

கட் குடியர் வந்து கலக்குதல் போலக்்
 காம நூலைக் கழற்றுவர் சிலபேர்

விழற்கு நீரை விடுவார் போல
வீண் கதை பேச விழைவார் சில பேர்

இவர்கள் முன்பு நான் என்ன செய்ய !

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப குரல் கம்மிடவும் ,குறுநா உலரவும் ,அழலை எழவும் அவரவர் தம்பால்

சமயோதிதமாய்ச் சந்ததம் பேசி இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன் .என்று வள்ளலார் "குடும்ப கோரம் "என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ளார் .

அடுத்து நித்திய கருமம் !

இந்த ஆன்மா என்ற குடும்பத்தில் நித்தியம் செய்ய வேண்டிய கருமங்கள் உள்ளன .

தினமும் மனையின் பின் புறத்தே ஏகிக் கலக்கும் மலத்தைத் கடிதே கழித்துக்

கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று பல்லில் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல ,வெண் சோமனைத் துவைத்து ,நன்னீர் ஆடி நறுமலர் கொய்து .தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்

பாவையை வைத்துப் பாடி ஆடும் சிறாரைப் போல செய்பணி யாற்றி ,

மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் வெண்ணீர் அதனை விளங்கப் பூசி ,புகழ் ருத்தராட்சி மாலையைப் உருட்டி உருட்டிக் குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்து

செய்த பின்னர் சிறிது நேரம் தூக்கம் வரும்போது பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி ,ஊன் பிண்டத்திற்கு உறு பிண்டம் ஈந்து ,குடிக்கூலிக் கடனை குறையறத் தீர்த்துப் பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது அதுவே .தொடர்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கை .

இதுதான் இன்று உள்ள உலகியல் வாழ்க்கை ,

இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து
 விடுபட்டு மனிதர்கள்  என்றும் அழியாத பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டும் எனபதற்காக  இறைவனால் வருவிக்க உற்றவர்தான வள்ளலார் .

அவர்கள் காட்டிய பாதை நேர் பாதையாகும் .அதுதான் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் உண்மையான வழி காட்டும் பாதையாகும் .

அந்தப் பாதையில் சாதி சமயம் மதம் இனம் மொழி நாடு போன்ற பேதங்கள் கிடையாது .

ஒரே கடவுள் என்ற கொள்கை உடையது .

அந்தக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும் .அவர் உருவம் அற்றவர் ,அருள் ஒளியாக உள்ளவர் .

அவரதான் தாயாக தந்தையாக நம்மை ஆண்டு கொண்டு உள்ளவர் .இதுவரையில் நமக்கு தெரியாமல் இருந்தவர் .வள்ளலார் வந்து நமக்கு காட்டி உள்ளார் .

இனிமேல் அவரை தொடர்பு கொண்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவோம் .

அவரிடம் அருள் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வோம் .

தொடரும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு