செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

தொடரச்சி :---

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்

மேலே கண்ட நான்கு படிகளும் சாகாக் கல்விக்கு வழி காட்டும் படிப்பு பயிற்சிகளாகும் .

அதற்கு தகுதி உள்ளவர்கள் யார் ? என்பதை நேற்று பாரத்தோம் .

ஞான சரியை என்றால் என்ன ?

 ஜீவ காருண்யமே முத்திக்கு முதற் படி என்கிறார் வள்ளலார் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு ! உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் அழுத்தமாக சொல்லுகின்றார் .

எனவே சுத்த சன்மார்க்கத்திற்கு ஜீவ காருண்யம் என்பது முதற் படியான ஞான சரியை என்பதாகும் .

நம்முடைய தலைவராகிய  அருட்பெருஞ்ஜோதி கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்து அருளைத் தர இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும் .

எனவே தான் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் .

அருள் அனபினால் அல்லாது வேறு வகையால் அடைவது அரிது .

அவ் அன்பு ஜீவ காருண்யத்தால் அல்லது வேறு வகையால் வராது .

ஜீகாருண்யத்தின் லாபமே அன்பு .

அன்பு உடையார் எல்லாம் உடையார்.

 ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் என்பார் வள்ளலார் .

உயிர்களிடத்தில் இரக்கம் காட்டினால் .கடவுள் இடத்தில் அன்பு தானாகவே வந்து விடும் .

ஜீவ காருண்யமே இந்திரிய ஒழுக்கம் .இந்திரிய ஒழுக்கமே ஞான சரியை . . . . .

இந்த ஜீவ காருண்யம் உண்டாவதற்கு ஏது?
அல்லது துவாரம் யாது எனில் ?

 கடவுள் உடைய பெருமையும் தரத்தையும் . . நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே . . . அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம .

இதுதான் முத்தி அடைவதற்கு முதல் அடியாக இருக்கின்றது . ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும் .

 முதற் படியாகிய ஞான சரியைக் கடைபிடித்து ,ஜீகாருண்யம் என்னும் இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் .

விரிக்கில் பெறுகும் -

அடுத்து ஞான கிரியையைப் பார்ப்போம்

தொடரும் . . .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு