செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

வள்ளலார் சொல்லும் சாகாக்கல்வி !

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம் !

இந்த நான்கு படிகள் தான் சுத்த சன்மார்க்க கொள்கைகள். என்கின்றார் வள்ளலார் .

இதுதான் இறைவன் அருளைப் பெற உயர்ந்த பாதைகள் .

உயர்ந்த கல்வியாகும் அதாவது சாகாக்கல்வி என்று பெயர் வைத்து உள்ளார் .

இந்தக் கல்வி கற்க என்ன என்ன தகுதி வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் !

 சுத்த சன்மார்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம் ,மதம் ,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவரகளும்

காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

மரணம் ,பிணி ,மூப்பு ,பயம் ,துன்பம் ---இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் .

அதாவது செயற்கையாகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலா அதிகார மரணம் நீங்கும் .

அப்படி இல்லாமல் இவ்விடம் காத்து இருப்பவர்கள் மரணத்தை தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள் .

அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்திற்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும் .

பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள் .

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்

என்றால் என்ன? என்பதை பின்பு பார்ப்போம் .

தொடரும் :----

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு