புதன், 20 ஜூலை, 2016

அருள் எங்கே இருக்கிறது.? எப்படிப் பெறுவது.?

அருள் எங்கே இருக்கிறது.? எப்படிப் பெறுவது.?
அருள் நம் சிரநடுவில் மூலையின் மத்தியில் ஆன்மாவின் ஒளியின் உள்ளே இறைவனால் பதிய வைக்கப்பட்டுள்ளது.கண்களுக்குத் தெரியாத ஒரு சிறிய துகள் போன்றது.அதில் உள்ள அருள் ஆற்றல் அளவிடமுடியாதது.அவை வெளியே வந்து தன சுய தன்மையைக் காட்டினால் உலகமே அதிசயிக்கும்படி பல அற்புதங்களைக் காட்டும் .அவை இறைவனுக்கு சமமானது.உலகை படைக்கும் தன்மையுடையது.ஐந்தொழில் வல்லமைப் பெற்றது.
அந்த மாபெரும் சக்திவாய்ந்த அருளைப் பெறுவது என்றால் சாதாரண விஷயமல்ல.அதில் ஏழுவகையான அருள் சுரப்பிகள் உள்ளன. ஒருசில சுரப்பிகளில் தோன்றும் அருளப் பெற்றவர்கள்,சுத்த தேகிகள்,பிரணவ தேகிகள்,அவர்கள் இம்மை இன்ப வாழ்வு,மறுமை இன்பவாழ்வு வாழ்ந்தவர்கள்.அவர்கள் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கத்தை மட்டும் கடைபிடித்தவர்கள். அதற்கு மேல் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கத்தை அவர்களால் கடைபிடிக்க முடியவில்லை.
ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் ஏழு படிகளான ஏழு திரைகளும் நீக்கி பரிபூரண அருளைப் பெற்றவர்தான் வள்ளலார் என்பவராகும்.அவர் இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் எனற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தவர்.
இவ்வுலகில் முழுமையான பூரண ஆருளைப் பெற்றதினால் வள்ளலாருக்கு ஐந்தொழில் வல்லபத்தை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார்.இவை யாவும் இறைவன் செய்யும் தொழில்.அத்தொழிலை அச்சுதந்தரத்தை வள்ளலாரிடம் ஒப்படைத்து உள்ளார்.
சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது
தூய உடம்பினுள் புகுந்தோம்
இதந்தரு உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்ஜோதிப்
பரசு பெற்றிடுக பொற்சபையுஞ்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே >
மேலே கண்ட பாடல்படி இறைவன் முழு சுதந்தரத்தையும் வள்ளலார் இடம்  கொடுத்ததோடு ஆல்லாமல்.அவர் உடம்பினுள் இறைவன் புகுந்து கொண்டார் கலந்து கொண்டார் ,மேலும் என்றும் அழியாமல் வாழ வாழும்  அருட்பெருஞ் ஜோதிப் பரிசும் கொடுத்துள்ளார்.பரிசு என்பது ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.ஐந்தொழில் வல்லபம் என்பதாகும். 
இதுவே அருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியுமாகும்.வள்ளலார் போல் வாழ்ந்தால் நாமும் அருளைப் பெறலாம்.வேறு குறுக்குவழியில் பெறமுடியாது அருள் .கிடைக்காது.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் என்னும்  ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை'' என்னும் உணர்வை,ஆன்ம   ஒழுக்கத்தை வரவழைத்துக் கொண்டால் அருளப் பெறலாம்.
நம்மைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது இடைவிடாத அன்பும்,அவரால் படைக்கப் பட்ட உயிர்கள் மீது கருணையும்,இரக்கமும் கொண்டால் மட்டுமே என்றும் அழியாத அருளைப்   பெற்று மரணத்தைப் வென்று மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழலாம் .
ஆன்மநேயன்;-ஈரோடு -கதிர்வேலு.
9865939896 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு