வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஆகம ஆரண விதிகள் தூர் நாற்றம் உள்ள குப்பைகள்.!

ஆகம ஆரண விதிகள் தூர் நாற்றம் உள்ள குப்பைகள்.!


ஆகமங்கள் ஆரணங்கள் போற்றிய பாதம் !

எந்தபாதம் அருட்பெருஞ்ஜோதியின் பாதம்.!

ஆரணம் ஆகமம் எல்லாம் பொய்யானது .ஆகம விதிகளும்,ஆரண விதிகளும் .கற்பனா விதிகள்.அதுதான் மக்களை அழித்துக் கொண்டு உள்ளது.

ஆகமங்களும்,ஆரணங்களும்,உண்மையான கடவுளைத் தேடிக் கொண்டு உள்ளன .இதுவரையில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

விதிகளை வைத்துக் கடவுளைக் காணமுடியாது .மதி என்னும் அறிவை வைத்துத்தான் கடவுளைக் காணமுடியும்.என்கின்றார் வள்ளல்பெருமான்.

நம்முடைய நீதி மன்றங்களுக்கோ .சட்டங்களுக்கோ .ஆரண ஆகம விதிகள் என்னவென்றே தெரியாமல் .ஆலயங்களில் ஆகமப் விதிப்படி அர்ச்சகர்களை அமர்த்தவேண்டும் என்று தீர்ப்பு சொல்லி உள்ளது.

கடவுளுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா ? வேண்டாமா ? என்பது கடவுளின் உண்மைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமேத் தெரியும்.நீதிபதிகளுக்கு எப்படித் தெரியும்.

சட்டப் புத்தகங்களைப் படித்த அறிவுக்கு அருள் அறிவைப் பற்றித் தெரியாது.

வள்ளலார் பதிவு செய்துள்ளப் பாடலைப் படியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பக்தி செய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்

நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்.
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்

வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம்
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்

நாராயணன் விழி நண்ணிய பாதம்
நான் புனை பாடல் நயந்தபொற் பாதம்
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்

வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்
எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்

அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய் உளந் தித்திக்கும் பாதம்

மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்த பொற் பாதம்
துரிய வெளிக்கே உரிய பொற் பாதம்
சுக மயமாகிய சுந்தரப் பாதம்

பெரிய பொருள் என்று பேசும் பொற் பாதம்
பேர் எல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம்
சாகா வரம் தந்த தாரகப் பாதம்
சச்சிதா ஆனந்த சதோதய பாதம்

தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்
ஓங்கார பீடத் தொளிர் கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்

துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்
ஐவண்ணமும் கொண்ட அற்புதப் பாதம்
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்

கண்ணும் கருத்தும் கலந்த பொற் பாதம்
ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்

சத்திய ஞான தயாநிதி பாதம் ஆடிய
தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கி என் னுள்ளே உறைகின்ற பாதம்

உண்மை விளங்க உரைத்தபொற் பாதம்
எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்

பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்
ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லா என் வாழ்முதற் பாதம்

மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்
அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்

பொன் வண்ண மாகிய புண்ணிய பாதம்
நாரண னாதியர் நாடரும் பாதம்
நான் தவத்தாற் பெற்ற நற் றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்

ஆசை விட்டார்க்கே அணிமையாம் பாதம்

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

ஆரணம் ஆகமம் எல்லாம் பொய்யானது .ஆகம விதிகளும்,ஆரண விதிகளும் .கற்பனா விதிகள்.அவற்றைப் பின்பற்றித்தான் மக்களை அழித்துக் கொண்டு உள்ளது.

உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி என்பதை அறியாமல் இருக்கும் வரை

மக்கள் ஆகம. ஆரண,போன்ற வேத  விதிகளின் தூர் நாற்றம் உள்ள குப்பைகளில் இருந்து வெளியே வரமுடியாது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு