வியாழன், 17 டிசம்பர், 2015

முட்டாள்கள் மறைந்து அறிவாளிகள் வரவேண்டும்.!

முட்டாள்கள் மறைந்து அறிவாளிகள் வரவேண்டும்.!


முட்டாள்கள் எல்லாம் நாட்டை ஆள்கிறார்கள்.

அறிவாளிகள் எல்லாம் ஒதுங்கி இருக்கின்றார்கள்

அறிவாளிகள் எல்லாம் அரங்கத்திற்கு வந்தால் ,முட்டாள்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள்..

அறிவாளிகளே வெளியே வந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள்.

முட்டாள்கள் நோட்டைக் கொடுத்து ஓட்டைக் கேட்டு வாங்குகின்றார்கள் .

நோட்டை விதைத்து ஓட்டை வாங்கி நாட்டை ஆள்கிறார்கள்.

நோட்டும் ஓட்டும் நாட்டை ஆளுமா ?

கோட்டைக்கு நோட்டும் ஓட்டும்  போக அனுமதிக்கலாமா ?

அறிவாளிகள் தூங்கினால்,முட்டாள்கள் விழித்து கொள்வார்கள்.

அறிவாளிகளுக்கு தூக்கம் வராமல் மக்களைப் காப்பாற்றும் ஏக்கம் வரவேண்டும்.

இறைவன் கொடுத்த அறிவு மக்களுக்குப் பயன்பட வேண்டும்

அறிவாளிகளே உங்கள் அறிவை விதைத்து மக்களின் அன்பை வாங்குங்கள் .

அறிவு உடையார் அன்பு உடையார்.!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் !

அன்பும் அறிவும் இருந்தால் ஓட்டை இல்லாமல் நாட்டைக் காப்பாற்ற முடியும்.

அன்பிற்கு விலை இல்லை,அறிவுக்கு விலை இல்லை .ஆள்வதற்கும்  விலை இல்லை.

அன்பை விதைப்பவனும் அன்பை வாங்குபவனும் ,,,.அறிவை விதைப்பவனும்,அறிவை வாங்குபவனும்...அருளைப் பெறுகின்றான் .

அன்பிற்கு விலை இல்லை,..அறிவிற்கு விலை இல்லை,...அருளுக்கும்  விலை இல்லை.

அன்பே வா ...அறிவே வா ....அருளே வா ..அனைவருக்கும் ஆதரவு தா !

மக்களே ஏமாற்றுபவர்களை நம்பி,ஏமாறாதீர்கள்.

விழித்து எழுங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு