புதன், 16 டிசம்பர், 2015

''திருஅருட்பா உலகின் உண்மையான அருள் நூல் ''

''திருஅருட்பா உலகின் உண்மையான அருள் நூல் ''


பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களை நல்வழிப் படுத்த பல ஞானிகளால் பல நூல்கள் எழுதி உலகம் எங்கும் படைக்கப் பட்டு உள்ளன.

பல போதகர்களாலும் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.உலகில் உள்ள அனைத்து நூல்களும் பொய்யான நூல்களே யாகும்.

எல்லா நூல்களும் சாதி,சமய,மதப் பற்றுள்ள கற்பனை நூல்கள்.

உலகில் மக்களின் நலனுக்காக. மக்களின்  வாழ்க்கைகாக, மனிதன் கடவுளின் உண்மையைத் தெரிந்து கொண்டு ,அருளைப் பெரும்  வழி முறைகளை உள்ளது உள்ளபடி உண்மையாக தெரிவிக்கின்ற ஒரே நூல் ''திரு அருட்பிரகாச வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பா'' மட்டுமே என்பதை மனித குலம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக மக்களைத் திருத்துவதற்கு இறைவனால் வருவிக்க உற்றவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

திருஅருட்பா ஒன்றுதான் இறைவனால் எழுதப்பட்ட நூல்.என்பதை உலக மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ ? தெரியவில்லை.

புரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் வரும் ,இது இறைவன் கட்டளை,

வள்ளலாரைப் பற்றி வெளி நாட்டினர் அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட அளவிற்கு.இன்னும் தமிழகம்,இந்தியா மாநில நாடுகள் முழுவதும் அறிந்து கொள்ளவில்லை,

கண்ட கண்ட நூல்களுக்கு பரிசும் பாராட்டுகளும் மத்திய அரசும் மாநில அரசும் ,தமிழ் மொழிக்கும்  ,பிறமொழிக்கும்  சான்றோர்களும் அரசியல் வாதிகளும் வழங்கிக் கொண்டு வருகின்றார்கள்.

படித்த அறிவுள்ள ஜீவிகள் திருஅருட்பாவைப் நன்கு படித்து இருந்தால் அவர்களுக்கு அறிவு விளங்கி இருக்கும்..

திருஅருட்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை உலகம் உருப்படி ஆகாது.

உண்மையை அறிந்து கொள்ளாமல் பொய்யை பின்பற்றுபவர்கள் அழிந்து போவார்கள்.

உலக உண்மையும் ,மனித வாழ்க்கையும் ,உயிர்களின் தோற்றமும்,மாற்றமும்,,இயற்கை உண்மையும், கடவுளின் தன்மையும்,ஆட்சி அதிகாரங்கள் நடத்தும் முறைகளையும்,மிகத் தெளிவாக மக்களுக்கு காட்டியுள்ள ''ஒரே நூல் திருஅருட்பா '' மட்டுமே...

திரு அருட்பாவைப் படித்துப் பயன் பெறுங்கள் ....

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே--சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு,../

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்கம் சங்கம் தலைப் பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து !

உலகில் உள்ள பொய்யான நூல்கள் அனைத்தும் அழிந்து போகும்.உண்மையான சுத்த சன்மார்க்கம் என்னும் புனித மார்க்கமான கொள்கைகள் ஒன்றே இனி எல்லா உலகும் நிலைபெறும் என்பது இறைவன் கட்டளை,இறைவன் ஆணையாகும்......என்கின்றார் வள்ளலார் .....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு