வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஆன்மா என்பது எது ?

ஆன்மா என்பது எது ?

ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி அதாவது ஆற்றல்  கோடி சூரிய பிரகாசம் உடையது.அந்த ஆன்மாவில் அமுதம் என்னும் அருள் நிறைந்து உள்ளது .

ஆன்மாவை  ஆன்மாகாயத்தில் இருந்து இறைவன் அனுப்பி வைக்கும் முன்,மீண்டும் திரும்பி வருவதற்காக அருளைப்  பதிய வைத்துதான் அனுப்பி வைக்கின்றார். 

இந்த பூத உலகத்திற்கு வந்ததும் ஆன்மா தனித்து வாழாது வாழ முடியாது  .உயிரும் உடம்பும் எடுத்துதான் வாழ வேண்டும் என்பது இறைவனின் சட்டமாகும்.

ஆன்மாவில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொதுவானதாகும்.ஆன்மா பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் கிடைத்து இருக்கின்றது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .வள்ளலார் உயர்ந்த அறிவு படைத்த மனித தேகம் என்கின்றார்.

ஆன்மா மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனித தேகத்தில் புருவமத்தியில் உச்சிக்கும் கீழே  உள் நாக்கிற்கும் மேலே புருவ மத்தியின் உள்ளே இயங்கிக் கொண்டு உள்ளது .

புருவ மத்தியில் வெண்தாமரை மலர் போல் மலர்ந்து இருப்பதாக ,அதன் மத்தியில் சிறு அணு ஒளிவடிவமாக ஒரு பீடம் இருக்கின்றது அதன் மத்தியின் உள்ளே அசையாது விளங்குகின்ற ஒரு தீபம் இருப்பதாகவும்,அந்தத் தீப நடுவில் கடவுள் இருப்பதாகவும் பாவித்துக் கொண்டு அருட்பெருஞ் ஜோதி என்று நாவசையாமல் அமைதியாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்து கொண்டே இருந்தால் யோகம் மாதி ஞான சித்திகளுக்கும் கிடைக்கும் இதை உண்மையாக நம்பி பயிற்சியில் ஈடு பாடு கொள்ளவேண்டும். 


அந்த ஆன்மா இருக்கும் இடத்திற்கு .புருவ மத்தி என்றும் ,முச்சந்தி என்றும் ,விந்து ஸ்தானம் என்றும்,ஆன்ம விளக்கம் என்றும்,ஆன்ம அறிவு என்றும்,மேலும் லலாடம் ஸ்தானம் என்பார்கள் .

அதன் வண்ணம் கால் பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .

ஆன்மாவின் செயல் பாட்டிற்க்காக உயிர் என்னும் ஜீவன் ,கரணங்கள் என்னும் மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகளும்,இந்திரியங்கள் என்னும் கண்,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் கருவிகளும் கொடுக்கப் பட்டுள்ளன் .

இவைகள் யாவும் ஆன்மா அனுபவிப்பதற்காக கொடுக்கப்பட்ட ,உபகாரக் கருவிகளாகும்.

கண், காது,மூக்கு,வாய்,உடம்பு போன்ற உறுப்புக்கள் மட்டுமே வெளியில் கண்களுக்குத் தெரியும் .இவைகளுக்கு உதவியாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.கண்களுக்கு தெரியாமல் உள்ள சூச்சும இந்திரியங்கள் என்பதாகும்.

அவைகளுக்கும் மேலாக கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் என்னும் கருவிகளாகும் .

அதற்கும் மேலே ,ஜீவன் என்னும் உயிராகும்..அதற்குமேலே ஆன்மா என்பது உள்ளது அந்த ஆன்மா அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.ஆன்மா என்பது இல்லை என்றால் எதுவும் இயங்காது .

ஆன்மாவின் வாழ்க்கை தேவைக்காக அனைத்து கருவிகளும் மற்றும் ,ஜீவன், கரணங்கள்,மற்றும் இந்திரியங்கள் ,ஆன்மாவின் தன்மைக்குத் தக்கவாறு மாயையால் உருவாக்கிக் (கட்டிக் ) கொடுக்கப்படுகின்றது. 

ஆகவே இதில்  ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.ஆன்மாவின் உண்மையை அறிந்து கொள்ள இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுத்துள்ளது.

ஆனால் புறத்தோற்றக் கருவிகளான ஐம்புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றத்தின் அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கரணக் கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .

இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிற்க்கு மாயா சக்தியின் பலம் அளவிட முடியாததாக உள்ளது, அந்த அளவிற்கு 'மாயா' சக்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].

அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளை பலவிதமாக கோணங்களில் சொல்லி உள்ளார்கள் .

மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .உடம்பின் முக்கிய கருவிகள் எது ? என்றால் .

இந்திரியங்களில் உள்ள கண்கள்  ,காரணங்களில் உள்ள மனம் ,இவை இரண்டும் மிக முக்கியமானதாகும்...கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது யாவும் இந்திரியங்கள் வழியாக புறத்தில் செயல்படும் .

எனவே தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் ?  .கண் போகும் இடம் மனம் போகும் .எனவே கண்களை வெளியே செல்ல வொட்டாமல்  புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்..எப்படி தொடர்பு கொள்ள முடியும்? 

அதற்குத்தான் தியானம் ,தவம் .யோகம் ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் ? அப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?

நாம் மாயா சக்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் , தவம் .யோகம்,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .

அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அறிய முடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலின் வாயிலாக பதிவு செய்துள்ளார்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது ;--அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்,அந்த உபகார சக்தியால எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது ;--அறிவும் அன்பும் உடனாக மறையும் .அதனால் உபகார சக்தி மறையும்.உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

அந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள்; விளக்கம் என்றும் .அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும் அறிய வேண்டும் .

இவ்விளக்கத்தையும் இன்பத்தையும்,பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும்,அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறியவேண்டும் என்று வள்ளல்பெருமான் தெளிவாக சொல்லி  உள்ளார்.

சொல்லியதோடு இல்லாமல் தான் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவரைப் போல் வாழ்ந்தால் தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் அருள் பெற முடியாது ''நான் என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .






















































































































































































































































































 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு