திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வள்ளல்பெருமான் எழுதிய அருட்பாவைப் படித்தால் !

வள்ளல்பெருமான் எழுதிய அருட்பாவைப் படித்தால் !

பக்தி வரும் பழ வினைகள் பறந்தோடும் மூலப் பகுதி மாயும்,

புத்தி வரும் புலை கொலைகள் புறம் போகும் ஆனந்தம் பொங்கும்,

சாந்த முத்தி வரும் அழியா நன் மோக்கமுறும் முது கடல் சூழ் உலகில் எல்லாச்

சித்திவரும் இராமலிங்க தேசிகன் தன் அருட்பாவைச் சிந்திப் போர்க்கே !

திரு அருட்பாவைப் ஊன்றிப் படித்தால்,பக்தி என்பது தானே வரும்.நம்மைப் பிடித்துள்ள பழைய வினைகள் யாவும் பறந்து போய் விடும்.

மேலும் தீராத நோய்கள் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்து விடும்.

புத்தி இல்லாது இருந்தால் புத்தி வரும்,கொலையும் புலையும் வெளியே போய் விடும்,அளவில்லா ஆனந்தம் பெருகும்.

கோபம் தொலைந்து அனைவரும் விரும்பும் சாந்தம் பெருகும்,

நீண்ட ஆயுளுடன் வாழும் முத்தி வரும்,நன்மை தரும் நோக்கம் உண்டாகும்.

மரணத்தை வென்று எல்லா உலகங்கள் தோறும் யாருடைய உதவிகளும் இல்லாமல் செல்லும் அருள் சித்தி கிடைக்கும்.

தினந்தோறும் திரு விளக்கை ஏற்றி வைத்து, திரு அருட்பாவைப் படியுங்கள் கிடைக்காத நன்மைகள் உங்களைத் தேடிவரும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு