திங்கள், 17 ஆகஸ்ட், 2015

உலகம் முழுவதும் ஒரே வழிப்பாட்டு முறையை பின் பற்ற வேண்டும் ....

உலகம் முழுவதும் ஒரே வழிப்பாட்டு முறையை பின் பற்ற வேண்டும் ....

உலகில் உள்ள சர்ச் ,மசூதி,கோயில்கள,
ஆலயங்கள்.பிரமிட்டுகள், மற்றும் உள்ள வழிப்பாட்டுத் தளங்கள் அனைத்தையும் அழித்து விட்டால் நல்லது .ஆனால் அப்படி அழிக்க முடியாது .

ஆனால் எல்லா ஆன்மீக வழிப்பாட்டு இடங்களிலும் .எல்லோருக்கும் பொதுவான ஒளி வழிப்பாட்டு முறையை பின்பற்றினால் நல்லது .

எல்லா சாதி,சமய, மதத்தாருக்கும் பொதுவானது ''ஒளி'' வழிப்பாட்டு முறையாகும்.அந்த ஒளிக்கு சாதி சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் கிடையாது .

இருளைப் போக்குவது ஒளி ... ஒளிக்கு சாதி சமயம்,மதம்
தெரியாது .ஒளி இல்லை என்றால் எல்லா இடங்களிலும் எல்லா இல்லங்களிலும் இருள் சூழ்ந்து விடும்.

எனவே ஆலயங்களில் உள்ள உருவங்களை எடுத்துவிட்டு ஒளியே கடவுளாக வைத்து வழிப்பட்டால் சாதி ,சமய, மத பேதங்கள் தானே ஒழிந்துவிடும் .

எனவேதான் எல்லோருக்கும் பொதுவான வழிப்பாட்டு முறையை வள்ளல்பெருமான் கொண்டு வந்தார்.

மேலும் கடவுளும் ஒளியாக உள்ளார் .கடவுளால் படைத்த ஆன்மாக்களும்  ஒளியாக உள்ளன. எல்லா உயிர்களும் ஒளியாக உள்ளன .,உடம்பில் உள்ள அணுக்களும் ஒளியாக உள்ளன.

ஒளி ஒன்றே எல்லா அண்ட பகிரண்டங்களிலும் விளங்கிக் கொண்டு உள்ளன.என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளங்க வைத்துள்ளார் .

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் கடவுள் கொள்கையில் வேறுபட்டு இருக்கின்றோம்.

அந்த வேறுபாட்டை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வழிப்பாட்டு இடங்களிலும் பொதுவான ஒளி வழிப்பாட்டு முறையைக் கொண்டு வரவேண்டும்.

சாதி,சமய,மதம் என்ற வேறுப்பாட்டை ஒழித்து ,மனித இனைத்தை ஒன்று சேர்ப்பதற்கு இதுவே சரியான வழி முறையாகும்.

பூனைக்கு யார் மணிக்கட்டுவது ? உண்மையான இறைவன்தான் மணிக்கட்ட வேண்டும் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு