வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

ஆன்மா தனியாகத்தான் வந்தது தனியாகத்தான் செல்லவேண்டும் !

ஆன்மா தனியாகத்தான் வந்தது தனியாகத்தான் செல்லவேண்டும் !

ஆன்மா இந்த உலகத்தில் வாழ்வதற்கு தனியாகத்தான் வந்தது.

இந்த உலகத்திற்கு வந்ததும் உயிரும் உடம்பும்,பஞ்ச பூதங்களால்  கொடுக்கப்படுகின்றது.

ஆன்மா சுய நலமில்லாமல் மற்ற உயிர்களுக்கும் உடம்பிற்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்துதான் மனிதப் பிறவி கிடைத்துள்ளது.

இந்த மனிதப்பிறவியில் அறம்,பொருள்,இன்பம்,என்பதை முழுமையாக அனுபவித்து மறுபடியும் வீடுபேறு அடைய வேண்டும்.

ஆனால் மனிதன் சுயநல எண்ணங்கொண்டு மற்ற உயிர்களுக்கும்,உடம்பிற்கும் துன்பம் கொடுத்து வாழ்வதால் அவனுக்கு தீராத துன்பம் வந்து விடுகின்றது.

அந்த துன்பத்தைப் போக்குவதற்கு,அறிவு தெளிவு இல்லாமல்,சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களை கடைபிடித்து,

பக்தி மார்க்கமான ,கோயில் குளங்களை சுற்றி கொண்டு ,அதற்கு உண்டான ஆச்சார ,சங்கற்ப,விகற்பங்களும்,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் செய்து வருகின்றான் .

அதனால் துன்பம் நீங்கிவிடுமா என்றால் நீங்காது.இன்னும் அதிகமான துன்பங்கள்தான் வந்து சேரும்.

மற்ற உயிர்களுக்கும் உடம்பிற்கும் துன்பம் செய்ததால் தான் துன்பம் வந்தது என்று தெரியாமல்.அந்த துன்பத்தைப் போக்கும் உண்மையான வழி தெரியாமல் பைத்தியக் காரத்தனமாக அலைந்து கொண்டு உள்ளான் .

எவ்வகையிலும் தீராத துன்பத்தைப் போக்கும் ஒரே வழி ஜீவகாருண்யம் தான் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக சொல்லி உள்ளார்.

தவறுகள் செய்து துன்பத்தில் வாழும் உயிர்களுக்கு உண்டாகும்,''பசி,''பிணி,''தாகம்,''இச்சை,''எளிமை,''பயம்,கொலை'' ,போன்ற துன்பங்களைப் போக்கினால் மட்டுமே ,மனிதனுக்கு வரும் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியும்.

அதேபோல் .ஆன்மாவுக்கு ,உயிரையும் உடம்பையும் கொடுத்த இந்த மாயை உலகிற்கு திருப்பிக்  கொடுத்து விட வேண்டும்.

உயிரையும் உடம்பையும்,திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வீடுபேறு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.

மரணத்தை வென்றால் மட்டுமே ஆன்மா தனித்து பேரின்பத்தைப் பெற்று உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும்.

ஆன்மா தனித்து வந்தது,..ஆன்மா இந்த உலகத்தில் மற்ற உயிர்களுக்கு இன்பத்தைக் கொடுத்து, இன்பத்தைப் பெற வேண்டும்.அப்படியான இன்பத்தைப் பெற்றால் மட்டுமே,ஆன்மா தனித்து செல்லும்படியான அருள் இறைவனால் வழங்கப்படும்.

அந்த அருள்தான் இறைவன் கொடுப்பது.இறைவனிடம் அருளைப் பெருவதுதான் .ஆன்மாவின் இயற்கை குணம் .
இயற்கை குணம் வந்த ஆன்மா எதுவோ அதுவே தனித்து செல்லமுடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு