திங்கள், 17 ஆகஸ்ட், 2015

தனி மனித ஒழுக்கம் என்றால் என்ன ?

தனி மனித ஒழுக்கம் என்றால் என்ன ?

நான் யார் ? நாம் யார் ? கோடானுகோடி உயிர் இனங்கள் தோன்றியது எப்படி ? உலகம் எப்படி தோன்றியது ?  ,

அனைத்தும் படைத்த இறைவன் அதாவது அந்த மெய்ப்பொருள் யார் ? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு .என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மா .உயிர்,உடம்பு,கொடுக்கப்பட்டதின் நோக்கம்
ஏன் ?

மனிதனுக்கு உயர்ந்த அறிவு கொடுக்கப் பட்டத்தின் நோக்கம் என்ன ?

உயர்ந்த அறிவு படைத்த மனிதன் தாழ்ந்த நிலைக்கு மாறுவதற்கு யார்? காரணம்.

மனித இனம் ஒழுக்கம் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன ?

ஒழுக்கம் என்றால் என்ன ? ஒழுக்கத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் .ஒழுக்கம் என்பதை நம்முடைய உடம்பில் எப்படி செலுத்த வேண்டும் ?

ஒழுக்கத்தை கடைபிடிக்கும் உறுப்புக்கள் என்ன ? என்ன ? என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே தனி மனித ஒழுக்கம் கை கூடும் .

மேலே கண்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியான விளக்கத்தை தந்தவர் ,அந்த ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் ஒருவரே நமது ''வள்ளல்பெருமான்''

வள்ளல்பெருமான் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே தனிமனித ஒழுக்கம் என்ன என்பது விளங்கும்.

ஒழுக்கம் என்ன என்பதை வள்ளல்பெருமான் நான்கு வகைகளாக பிரித்து உள்ளார் .

அவைதான் ;-- இந்திரிய ஒழுக்கம்,...கரண ஒழுக்கம்..ஜீவ ஒழுக்கம் ..ஆன்ம ஒழுக்கம் .என்பதாகும்.

மேலே கண்ட ஒழுக்கத்தில் முதல் இரண்டு ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் என்பதை கடைபிடித்து அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே தனி மனித ஒழுக்கம் தானாக வந்துவிடும் .

அடுத்த இரண்டு ஒழுக்கங்களை முறையாக பின்பற்றினால் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் ஒழுக்கங்கள் தானே கை கூடும் .

இந்த உலகத்தில் தனிமனித ஒழுக்கம் என்ன எனபதைப் பற்றி வள்ளலாரைப்போல் எவரும் சொல்லவில்லை .

இந்த உலகத்தில் சாதி,சமயம்,மதங்கள் சொல்லிய அனைத்து ஒழுக்கங்களும் பொய்யானது .

எனவே தனி மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டுமானால்  வள்ளலார் எழுதி வைத்துள்ள ''திருஅருட்பாவில் '' உள்ள ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் பகுதியில் மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார் ,

அவற்றில் உள்ள கருத்துக்களை,கொளகைகளை , நன்கு படித்து தெரிந்து கொண்டு அதன்படி வாழ்ந்தால்  மட்டுமே தனி மனித ஒழுக்கம் நிலைபெறும் .

அப்படி ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் இந்த உலகம் புனிதத் தன்மை பெரும்.

சாதி,சமயம்,மதம்,போன்ற பொய்யான கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு,அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒழுக்கத்தை பின்பற்றினால் மட்டுமே புதிய பொற்கால சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு