வியாழன், 27 ஆகஸ்ட், 2015

அபர விந்து அபரநாதம்,பரவிந்து பரநாதம் !

அபர விந்து அபரநாதம்,பரவிந்து பரநாதம் !

நாம் உண்ணும் உணவினால் உருவாகும் இரத்தம் ,இரத்தத்தினால் வருவது விந்துவாக்கும். ,விந்துவினால் வரும் ''சபதம்'',அதற்கு ''விந்து நாதம்'' என்று பெயர்.

விந்துவினால் வரும் நாதத்தினால்தான் நாம் பேசுகிறோம்,பாடுகிறோம்,உண்கிறோம்,செயல்படுகின்றோம்.விந்து நின்றுவிட்டால் ,நம்மால் எதுவும் செய்யமுடியாது,செயல்பட முடியாது,பேசவும் முடியாது..

விந்துவை வெளியே விடாமல்,செலவு செய்யாமல்,மிகவும் ஒருமை என்னும் நான்கு ஒழுக்கத்தினால், விந்துவின் சக்தியை ,ஆறு ஆதாரத்தின் வழியாக மேலே ஏற்ற வேண்டும்.மற்ற வழிகளால் ஏற்ற முடியாது.ஏற்றவும் கூடாது.

அப்படி மேலே ஏற்றி ஆன்மாவிடம் தொடர்பு கொண்டால் ,அதன் சுத்த உஷ்ணத்தால் ,ஆன்மாவின் உள் இருக்கும் ஒளியுடன் தொடர்பு கொண்டால், ,ஆன்மாவில் இருந்து ஒரு சபதம் உண்டாகும்,அதற்கு பரநாதம் என்றுபெயர்.

விந்துவினால் வரும் சப்தம்,அபர நாதம் என்றும் விந்து நாதம் என்றும் பெயர்.அருளினால் வரும் சப்தம் பரநாதம், என்று பெயராகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு