வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லியது.!

ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லியது.!

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து !

அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக --நச்சரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு !

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !

நாட்டை ஆளுகின்றவர்கள் .மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குகின்ற ''அருள்'' நிறைந்தவர்களாக அன்பு நிறைந்தவரகளாக ,கருணையும், தயவும்,உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாதவர்கள் அழிந்து போக வேண்டும் என்று கட்டளை இடுகின்றார்.

மக்கள் துன்பம் அச்சம் ,பயம், இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டிகளாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும் என்கின்றார்.

எதிலும் பொது நோக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கின்றார்.

உயிர்களைக் காப்பாற்றும் தயவு,அன்பும்,கருணையும் உள்ளவகளாக இருக்கவேண்டும் என்கின்றார்.

மக்களுக்கு நல்வழியைக் காட்டி மக்களை புனித முள்ளவர்களாக மாற்றவேண்டும் என்கின்றார்.

நாட்டில் பஞ்சம் ,பட்டினி,வறுமை,சோகம்,துன்பம்,பயம்  இல்லாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார்.

நாட்டை ஆளுகின்றவர்களால் மக்களுக்கு துன்பம் வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டே இருந்தேன் என்கின்றார்.

வள்ளலாரின் கருத்துக்களை ஏற்று நாட்டை ஆளுகின்றவர்கள் கடைபிடித்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு