செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தன்னை அறிதல் வேண்டும் !

தன்னை அறிதல் வேண்டும் !

தான் யார் ? என்பதை அறிவதே அறிவு .

தனக்கு, உயிரையும் உடம்பையும் கொடுத்து இவ்வுலகில்   வாழ்வதற்கு அனுப்பியவர் யார் ? அவர் எங்கு இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் .அவருக்கும் நமக்கும் உள்ள  தொடர்பு என்ன ? என்பதை அறிதலே தன்னை அறிதலாகும்.

தன்னுடைய உடம்பில் உள்ளே உறுப்புகளை அனைத்தும் தன்னைத்தானே இயங்க வைத்து,அவற்றை தோலினால் மறைத்து .ஒரு அழகான உடம்பு என்னும் வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார் .

அந்த உடம்பில் ஒன்பது வாயில்கள் என்னும் துவாரங்கள் வைத்து இயங்க வைத்துள்ளார் .

அந்த ஒன்பது வாயில்கள் வழியாகத்தான் உடம்பிற்கு  உள்ளே பொருள்களை அனுப்புவதும்,  உடம்பில் உள்ள கழிவுகளை வெளி ஏற்றப் படுவதும் நடந்து கொண்டே உள்ளது.

அதிலே ஒன்று வாய் என்னும் வாயில், அதன் வழியாத்தான் உணவுகள் உள்ளே அனுப்பப் படுகின்றது

அடுத்து உடம்பில் உள்ள உறுப்புகளை இயக்க காற்றுத் தேவைப்படுகின்றது ,அந்தக் காற்று மூக்கின் வழியாக அனுப்பப்டுகின்றது.

இந்த உலகத்தைப் பார்க்க கண்கள்  தேவைப் படுகின்றது.

உலகத்தில் உள்ள சப்தத்தை கேட்க காதுகள் தேவைப்படுகின்றது,

உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மலத் துவாரம் தேவைப்படுகின்றது.

கழிவு  நீரை அகற்ற ஆண்குறி ,பெண் குறி என்னும் துவாரம் தேவைப்படுகின்றது.

அதே நேரத்தில் ஆணும் பெண்ணும் இன்பத்தை அடைய ஆண் குறியும் பெண் குறியும் தேவைப் படுகின்றது..அந்த இன்பத்தினால் குந்தைகள் உருவாகின்றது.

இவ்வளவையும் அமைத்துக் கொடுத்த தலைவன் யார் ?

அந்த ஒன்பது வாயில்கள் கொண்ட ,உடம்பை இயக்கும் தலைவன் யார் ? என்பதை அறிதலே தன்னை அறிதலாகும்.

அந்த தலைவன் தான் ''ஆன்மா  என்னும் உள்  ஒளியாகும்''.அந்த ஒளியுடன் தொடர்பு கொள்ளுதலே தன்னை அறிதலாகும்.

அந்த ஒளியின் உள்ளேதான் பேரறிவு என்னும் பகுத்தறவு நிறைந்து இருக்கின்றது.

அந்த அறிவைத் தெரிந்து கொண்டவன் .ஒன்பது வாயில்களையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வான்.அவன் சொல்படி அவைகள் கேட்கும்.

அந்த அறிவை அறிந்து அதன்படி வாழ்பவனே உயர்ந்த மனிதன் என்று போற்றப் படுகின்றான்.அவனுக்கு இன்பமும் துன்பமும் சரி சமமாகத் தெரியும்.

அவனுக்கு தோல்வியும் வெற்றியும் ஒன்றுதான்.

தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
தலைவனை அறிந்தவன் தன்னை அறிவான் .

தன்னை அறிந்தவனுக்கு தனக்கு ஒரு கேடும் இல்லை என்பார்கள் பெரியோர்கள்.

எனவே ஒவ்வொரு மனித ஜீவர்களும் தன்னை அறியவேண்டும்.

வள்ளல்பெருமான் தன்னை அறிய இறைவனிடம் வேண்டும் பாடல் ;--

தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே !ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே !

என்பதை கேட்டுத் அறிந்து தன்னை அறிந்தார்,
தலைவனை அறிந்தார்,அண்ட பிண்டங்களை அறிந்தார் அதனுள் இயங்கும் அனைத்துப் பொருள்களையும் அறிந்தார் .அதன் கலைகளையும் அறிந்தார் .

எல்லா வற்றையும் இயக்கும் தலைவன் யார் ? என்பதை அறிந்தார் .அவர் யார் ? என்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி'' என்னும்.பொதுவான  
தனித்தலைமைத் தலைவன். அவர் அருட் பேரொளியாக உள்ளார் .

தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம், தலைவனை அறிந்தால் தனக்கு ஒரு கேடில்லை .அதாவது துன்பம் இல்லை.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு