சனி, 8 ஆகஸ்ட், 2015

ஏன் அப்துல்கலாம் அவர்கள் சொல்லவில்லை !

ஏன் அப்துல்கலாம் அவர்கள் சொல்லவில்லை !

நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் .மாணவர்களை கனவு கானச்சொன்னார் .

இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று சொன்னார்

இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று சொன்னார்

அணு ஆராய்சியைப் பற்றி போதித்தவர் ,

குடியும்,கொலையும்.புலாலும்,உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்தும் ஏன் ? போதிக்கவில்லை.

தான் புலால் உண்ணாமலும்,மது அருந்தாமலும் வாழ்ந்துள்ளார் .தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மாணவர்கள் இடையே பகிர்ந்து கொண்டு வந்துள்ளார்.

ஆனால் மது அருந்துவதும்,புலால் உண்பதும் மிகவும் தவறானது அதனால் பல குடும்பங்கள் பாதித்து உள்ளது பாதித்து கொண்டும் உள்ளது ஆதலால் மாணவர்களாகிய நீங்கள் அந்த தவறை செய்யக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை..

அப்துல்கலாம் அவர்கள் திருக்குறளை நேசித்தவர் .அதில் குடிப்பதும் ,கொலை செய்வதும் புலால் உண்பதும் குற்றங்களிலே மிகவும் பெரிய குற்றமானது என்று நான்கு அதிகாரங்களில் திருவள்ளுவர் சொல்லி உள்ளார் .

மாணவர்களாகிய நீங்கள் மது அருந்துவதும் ,ஒரு உயிரைக் கொன்று அதன் புலாலை ( மாமிசம் ) உண்பதும் மிகவும் தவறானது என்று ''ஏன்'' வலியுறுத்தி போதிக்க வில்லை .

எண்ணக் காரணம் .?

அப்படி அதைப் பற்றி போதித்து இருந்தால் மக்களும் மாணவர்களும் அவரை நெருங்கி இருக்க மாட்டார்கள்,அவருடைய பேச்சை கேட்டு இருக்க மாட்டார்கள் என்ற பயத்தால் போதிக்க வில்லையா ?

ஒரு உலகம் ஒழுக்கமல் இல்லாமல் வாழ்வதற்கு கொலையும் புலையும்,மதுவும் தான் காரணம் என்று ,திருவள்ளுவரும் ,வள்ளல்பெருமானும் ஆணித்தரமாக மக்களுக்கு போதித்து உள்ளார்கள் என்பது .அப்துல்கலாம் அவர்களுக்கு நன்குத் தெரியும்.

தெரிந்தும் மக்களுக்கு அவற்றைப் பற்றி ஏன் அப்துல்கலாம் அவர்கள் போதிக்கவில்லை.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு