செவ்வாய், 16 ஜூன், 2015

புராணங்களின் உண்மை யாதெனில் !

புராணங்களின் உண்மை யாதெனில் !

புராணங்கள் யாவும் ஜடமான தத்துவங்களைப் பற்றியே பேசி இருக்கின்றன.

உலகில் உள்ள எல்லா சமயங்களும்,மதங்களும்,
தத்துவங்களான மனித உடம்பை பற்றியும் .இந்த உலகத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் அதற்குண்டான உயிரின் ,உடம்பின் கருவிகளான உறுப்புக்கள்  என்னும் தத்துவ சட்டங்களைப் பற்றியே போதித்து இருக்கின்றன .

பெரிய புராணத்தில் குறித்த 63,தத்துவங்களும் உடம்பில் உள்ள உறுப்புகளாகும்.

அந்த கருவிகளின் செயல்பாட்டை,அதாவது கலைகளை 63,நாயன்மார்களாக படைத்து கதைகளாக கவிதைகளாக மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .

உத்தரத்திற்கு ;--தேவாரம் என்றால் தேவ் என்றால் தயவு என்பதாகும்....ஆரம் என்றால் ஒழுங்கு என்பதாகும்.ஒழுக்கமான தயவுடன் வாழ வேண்டும் என்பதாகும்.

திருவாசகம் என்றால் ;-- மெய்ப்பொருள் நிரம்பிய கலைகளின் வார்த்தை என்பதாகும்.உண்மையே பேச வேண்டும் என்பதாகும்.அப்போதுதான் இறைவன் யார் என்பதை அறிய முடியும் என்பதாகும்.

திருமந்திரம் என்றால் ;--உயர்ந்த சாத்திரங்களை ,அதாவது கிரக நிலைகளை ( கலைகளை) சொல்லும் ,விளக்கும் மந்திரம் என்பதாகும்.

அதாவது மனித உயிருக்கும், உடம்பிற்கும் பஞ்ச பூதங்களுக்கும்,கிரகங்களுக்கும் உள்ள கலையின் தொடர்பை விளக்கும் உண்மை செய்திகளாகும்.

ஆகவே வள்ளல்பெருமான் பக்தியில் (தோத்திரங்களில்) சிறந்தது திருவாசகம் என்றும்.சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம் என்றும் இவற்றை ஊன்றி பார்க்கவும் என்று சொல்லுகின்றார்.

ஊன்றி பார்க்கவும் என்று சொல்லுவதால் .அவற்றில் உண்மையான கடவுள் யார் என்பதும் ஆன்மாக்கள் எங்கு இருந்தன என்றும் ,எப்படி இவ்வுலகத்திற்கு வந்தன என்றும்,ஆன்மா உயிரும் உடம்பும் எப்படி எடுத்தது என்றும்.ஆன்மா மீண்டும் எங்கு செல்ல வேண்டும் என்றும் ஆன்மா திரும்பிச்செல்ல எவை தடையாக இருக்கின்றது என்றும் .தெளிவாக சொல்லவில்லை என்றும் வள்ளல்பெருமான் தெரியப்படுத்துகின்றார்.

நம் நாட்டில் தோன்றிய அருளாளர்கள் ஓர் அளவிற்கு மக்கள் நலன் கருதி ஓர் அளவிற்கு இலை மறை காய் மறையாக சொல்லி உள்ளார்கள் மற்ற நாட்டில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும் போதகர்களாகவே இருந்துள்ளார்கள் பொருளைப் பற்றியே பேசி இருக்கின்றார்கள் .''அருள்'' என்பது எது ?என்ன? என்பதைப் பற்றி எவருமே சரியாக போதிக்கவில்லை .

வள்ளல்பெருமான் ஒருவர் மட்டுமே எல்லா உண்மைகளையும் விளங்கும்படி விளக்கி உள்ளார் விளக்கியதோடு அல்லாமல் .பெய்ப்பொருள் என்னும் அருளைப் பெற்று  வாழ்ந்து காட்டியவர் .

அனைத்து அருளாளர்களும் பொருளைப் பற்றியே பேசி உள்ளார்கள்.அருளைப் பற்றி தெளிவாக பேசவில்லை விளக்கம் தரவில்லை.

வள்ளல்பெருமான் மட்டுமே பொருளால் வரும் துன்பங்களையும் அருளால் வரும் இன்பங்களையும் தெளிவாக, அனைத்து உலக மக்களும் புரிந்து ,தெரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் தந்து உள்ளார். சொல்லிய வண்ணம் வாழ்ந்தும்  காட்டி உள்ளார் .

உலகில் உள்ள அனைத்து அருளாளர்கள் எழுதிய நூல்களும் பொய்யானது அவற்றை படிக்க வேண்டாம் நம்ப வேண்டாம் என்று மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ..

ஞான சரியை நான்காவது பாடல் ;--

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே

உலகயலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !

என்று மக்களுக்கு விளக்கி உள்ளார் .இதுவரையில் கண்டது,கேட்டது,கற்றது,களித்தது ,உண்டது ,உட் கொண்டது ,எல்லாம் குறைபாடு உடையது .

இதுவரையில் உண்மையை யாரும் போதிக்க வில்லை.ஆதலால் தளர்ச்சி அடைய வேண்டாம்.பயப்பட வேண்டாம்  இனிமேல் சுத்த சன்மார்க்க உண்மை மெய் நெறியை கடைபிடியுங்கள் .

சுத்த சன்மார்க்க நெறியில்தான் மெய்ப்பொருள் என்னும் இயற்கை உண்மை இறைவன் யார் என்பதை காட்டி உள்ளேன்..

அவரிடம் தொடர்பு கொண்டு என்றும் அழியாது வாழ்வாங்கு வாழும் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வீர்கள் .என்பதை தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

எனவே சாதி,சமயங்கள்,மதங்கள் சொல்லும் பொய்யான மருள் நெறிகளை தூக்கி எரிந்து விட்டு அருள் நெறியை பின்பற்றி வாழ்வோம்.

என்றும் பிரியாத உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

1 கருத்துகள்:

25 ஜூலை, 2015 அன்று PM 12:43 க்கு, Blogger Unknown கூறியது…

Sir highly misleading article - without decoding thiruvasakam and thiruvilaiyadal puranam , you cant map the process to APJ - its quite certain


u r trailing by light years wrt to truth

BG Venkatesh
1008petallotus.wordpress.com

pl read my article on books each suththa sanmargi MUST read

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு